tamilnadu

img

அரசுப் பள்ளி ஆசிரியருக்கு பாராட்டு

 தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி ஊராட்சி ஒன்றிய வடகிழக்கு தொடக்கப் பள்ளியில் உதவி ஆசிரியராகப் பணியாற்றி வருபவர் அ.ஹாஜா முகைதீன். இவர் தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறையின் கீழ், தமிழக ஆசிரியர்களுக்கான இயங்கும் இணைய தளமான டி.என்.டி.பி (தமிழ்நாடு டீச்சர்ஸ் பிளாட்பார்ம்)யில், மூன்றாம் வகுப்பு, முதல் பருவ தமிழ் பாடத்தில், கவியரசு கண்ணதாசன் எழுதிய “தமிழ் அமுது” என்ற பாடலை, இசை சேர்த்து, பாடி, பாடலாக பதிவேற்றம் செய்துள்ளார்.  இதனை டி.என்.டி.பி தேர்வுக்குழு தேர்வு செய்து, பள்ளிக் கல்வித் துறை சார்பாக ஆசிரி யர் அ.ஹாஜா முகைதீனுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கியுள்ளது. இதற்காக பள்ளி ஆசிரியர் அ.ஹாஜா முகைதீனுக்கு, தலைமை ஆசிரியர் சித்ரா தேவி, ஆசிரியை ரேணுகா, பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் கௌதமன், தொழிலதிபர் ஏஷியன் ஹெச். சம்சுதீன், முன்னாள் பேரூராட்சி மன்ற உறுப்பினர் முகமது பாரூக், தொண்டு நிறுவன பிரதிநிதி எஸ்.ஜகுபர்அலி, பள்ளி வளர்ச்சிக்குழு, காந்தி, பள்ளி மேலாண்மைக் குழு தலைவி நீலவேணி, ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் சொக்கலிங்கம் பாராட்டினர்.