தஞ்சாவூர், மார்ச் 15- கடந்த 2018 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 16 ஆம் தேதி வீசிய கஜா புயலால் தஞ்சா வூர் மாவட்டம், பேராவூரணி யில் அனைத்து கயிறு தொழிற்சாலைகளும் முழு மையாக சேதம் அடைந்தது. சேத விபரங்கள் மாவட்ட தொழில் மையங்கள் மூலமா கவும், வருவாய் துறை மூல மாகவும் மதிப்பீடு செய்யப் பட்டு இழப்பீட்டு தொகையை நிர்ணயம் செய்து தமிழக அர சுக்கு பரிந்துரைத்தது. ஆனால், இதுவரை இழப் பீடு கிடைக்காத நிலை உள் ளது. இதனால் தொழிற் சாலையை சீரமைக்க முடி யாமலும், தொடர்ந்து நடத்த முடியாமலும் இருக்கிறோம். எனவே தமிழக அரசு உடனடி யாக இழப்பீடு வழங்க வேண் டும் என காயர் புராடக்ட்ஸ் இன்டஸ்ட்ரீஸ் ஓனர் அசோசி யேசன் வலியுறுத்தியுள்ளது.