tamilnadu

img

ஏற்காடு:சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை கட்டுப்படுத்த கோரிக்கை

ஏற்காடு, அக்.25- ஏற்காட்டில், சாலையில் சுற்றி திரியும் மாடுகளை கட்டுப்படுத்தக் கோரி பொதுமக்கள் மன்றத்தினர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் வியாழனன்று மனு  அளித்தனர்.  சேலம் மாவட்டம், ஏற்காடு பேருந்து நிலையம், காந்தி பூங்கா, ஏரி பகுதி, மஞ்சக்குட்டை சாலை, நாகலூர் சாலை, சேலம் பிரதான சாலை உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான மாடுகள் சாலைகளில் சுற்றி  திரிகின்றன. மேலும் சாலையின் மத்தியில் படுத்து கிடக்கின்றன. இம்மாடுகள் சாலையில் அங்குமிங்கும் ஓடுவதால் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் மற்றும் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்குள்ளாகின்றனர். மேலும் பனிமூட்டம் நிலவும் போது சாலைகளில் படுத் திருக்கும் மாடுகள் தெரியாததால் வாகனங்கள் மோதி  விபத்துக்குள்ளாகின்றன.  எனவே, சாலைகளில் கேட்பாரற்று திரியும் மாடு களை அப்புறப்படுத்துமாறு பொதுமக்கள் மன்றத்தின் சார்பில் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மேலாளர் அருள் ஆனந்தராஜிடம் மனு அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட அவர், இது குறித்து விரைந்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.