சேலம், மார்ச் 12- உலக சிறுநீரக தினத்தை முன்னிட்டு சேலம் மாநக ராட்சி அலுவலக வளா கத்தில் சுகாதார தொழி லாளர்களுக்கு வியாழ னன்று சிறப்பு மருந்துவ முகாம் நடைபெற்றது. சேலம் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் உலக சிறுநீரக தினத்தை முன்னிட்டு சேலம் மாநக ராட்சி, சேலம் யூரோ கேர் ஸ்பெசாலிட்டி கிளினிக் மற்றும் இன்னர் வீல் கிளப் சேலம் மேங்கோ சிட்டி ஆகியோர் இணைந்து சுகா தார தொழிலாளர்களுக்கு இலவச சிறு நீரக சிறப்பு மருந்துவமுகாம் நடைபெற்றது. இம்முகாமை சேலம் மாநகராட்சி ஆணை யாளர் ரெ.சதீஸ் முன்னிலையில், மாவட்ட ஆட்சியர் சி.அ.ராமன் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். இம்முகாமில் அல்ட்ரா சவுண்ட் கிட்னி ஸ்கேன், சிறுநீரக வேக பரிசோதனை-யூரோ புளோமெட்ரின், ரத்தத்தில் யூரியா, கிரியா டினின் அளவு பரிசோதனை, ரத்தத்தில் சர்க்கரை அளவு, ரத்த அழுத்தம் ஆகிய அனைத்து பரிசோதனைகளும் முற்றிலும் இலவசமாகவும், சிறுநீரக சிறப்பு மருத்து வருடன் ஆலோசனைகளும் இலவசமாக வழங்கப்பட்டது. மேலும் இப்பரிசோத னைகளின் போது உயர் சிகிச்சைகள் தேவை படுபவர்களுக்கும் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் சிறப்பு சிகிச்சை அளித் திடவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இம்முகாமில் மாநகர நல அலுவலர் மரு.கே.பாத்திபன், சிறுநீரக சிறப்பு மருத்துவர் மரு.வி.ஆர்.ரத்தீஷ் ராஜேந்திரன், இன்னர் வீல் கிளப் சேலம் மேங்கோ சிட்டி தலைவர் சுதா விஜய்சதீஸ், செயலாளர் சிந்துஜா கிஷோர், செயற்பொறியாளர் (திட்டம்) எம். பழனிசாமி, உதவி ஆணையர்கள் பி.ரமேஷ் பாபு, டி.ரெங்கநாயகி, ஆர்.கவிதா, உதவி செயற்பொறியாளர்கள் எம்.ஆர்.சிபி சக்கரவர்த்தி, மு.லலிதா, எம்.செல்வராஜ், நிர்வாக அலுவலர் பி.மருதபாபு, சுகாதார ஆய்வாளர்கள் எம்.சித்தேஸ்வரன், எம்.கந்த சாமி, வீ.சரவணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.