மத்திய அரசு, சேலம் உருக்காலையை தனியாருக்கு தாரைவார்க்கும் முடிவிற்கு எதிராகவும், கார்ப்பரேட்டுகளை ஆலையின் உள்ளே நுழைய விடமாட்டோம் என சேலம் உருக்காலை தொழிலாளர்கள் தொடர்ந்து காத்திருப்பு போராட்டத்தை நடத்தி வருகின்றனர். திங்களன்று 15ஆவது நாளாக நடைபெற்ற போராட்டத்திற்கு சேலம் உருக்காலை ஐஎன்டியுசி சங்க செயலாளர் டி.தேவராஜ் தலைமை தாங்கினார். சிஐடியு சேலம் மாவட்டச் செயலாளர் டி. உதயக்குமார், சிஐடியு சேலம் மாவட்டத் தலைவர் பொ.பன்னீர் செல்வம், சேலம் உருக்காலை சிஐடியு சங்க செயலாளர் கே.பி.சுரேஷ்குமார், சிபிஎம் மாவட்டக்குழு உறுப்பினர்கள் ஜி.கண் ணன், பி.பாலகிருஷ்ணன் மற்றும் அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகள், தொழிலாளர்கள் அனைவரும் குடும்பத்துடன் பங்கேற்றனர். இதில் தனியார்மயத்திற்கு எதிராக கண்டன முழக்கங்கள் எழுப்பினர்.