tamilnadu

img

நிறுத்தி வைக்கப்பட்ட பணிகளை மீண்டும் துவங்க மின்வாரியம் உறுதி

சேலம், ஜூன் 11- ஓமலூர் அருகே ஆளுங்கட்சி யினர் தலையிட்டால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மின் வாரிய பணிகளை மீண்டும் துவங்க நடவடிக்கை எடுப்பதாக மின் வாரிய அதிகாரிகள் அளித்த உறுதிமொழியை ஏற்று காத் திருப்பு போராட்டத்தை விவ சாயிகள் ஒத்திவைத்தனர். சேலம் மாவட்டம், ஓமலூர் பகுதியில் கருப்பூர் மின் பகிர்மான வட்டத்திற்குட்பட்ட நல்லப்பன்காடு திட்டு சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட விவ சாயிகள் மற்றும் விவசாயம் சார்ந்த சிறு, குறு தொழில் முனைவோர் நிறைந்த பகுதி யாகும். இங்கு கடந்த மூன்று ஆண்டுகளாக குறைந்த மின்ன ழுத்தத்தால் விவசாயிகள் அவ திப்பட்டு வருகின்றனர். இதனை சரி செய்ய வேண்டும் என பல முறை அரசு அதிகாரிகளிடம் முறையிட்டு மனு கொடுத்தனர். மேலும், கடந்த ஓராண்டுக்கு முன்  கருப்பூர் மின்பகிர்மானம் அலு வலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.  இதனைத் தொடர்ந்து சுமார் ஆறு மாதங்களுக்குப் பிறகு சரி யான மின்னழுத்தம் தரும் வகை யில் புதிய மின்மாற்றி அமைக் கப்பட்டது. அதோடு சில மின் கம்பங்களும் அமைக்கப்பட்டது. இதற்கான பணிகள் அனைத்தும் முடிவடையும் நிலையில், ஆளும்  கட்சி பிரமுகர் ஒருவரின் தலை யிட்டால் அப்பணி திடீரென நிறுத்தப்பட்டது. இதன்பின் இறுதிகட்ட பணிகள் மேற் கொள்ளப்படாமல் அவை கிடப் பில் போடப்பட்டுள்ளது.  இதனை கண்டித்தும், நிறுத் தப்பட்ட பணிகளை மீண்டும் தொடங்கி தேவையான மின்ன ழுத்தத்துடன் மின் விநியோகம் செய்யக்கோரியும் கடந்த திங்க ளன்று (ஜூன் 10) தமிழ்நாடு விவ சாயிகள் சங்கம் சார்பில் காத் திருப்பு போராட்டம் அறிவிக்கப் பட்டிருந்தது. இந்நிலையில் விவசாயிகள் சங்க நிர்வாகிகளை மின்வாரிய அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு அழைத்தனர். அதன்படி கருப்பூர்  மின்பகிர்மான அலுவலகத்தில் உதவி பொறியாளர் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஏ.ராமமூர்த்தி, உதவி தலைவர் பி.தங்கவேலு, வட்டத் தலைவர் பி.அரியாக்கவுண்டர், செயலாளர் அர்த்தனாரி, பொருளாளர் சுரேஷ், விவசாய தொழிலாளர் சங்க வட்ட செயலாளர் மோகன், நடராஜன், கோவிந்தராஜ், கருப் பண்ணன் உள்ளிட்டோர் பங் கேற்றனர். இப்பேச்சுவார்த்தையில் காவல்துறை துணையுடன் எஞ் சியப் பணிகளை விரைந்து முடிப் பது என முடிவானது. மேலும், மின்வாரிய பணிகளுக்கு இடையூ றாக சிலர் இருக்கும் நிலையில் காவல் துறை பாதுகாப்பளிக்க வேண்டும் என சூரமங்கலம் காவல் ஆய்வாளரிடம், மின் வாரிய பொறியாளர் கேட்டுக் கொண்டார். இதையடுத்து தமிழ் நாடு விவசாயிகள் சங்கம் அறி வித்திருந்த காத்திருப்பு போராட் டம் தற்காலிகமாக ஒத்தி வைக் கப்பட்டது.