tamilnadu

விவசாயிகள் நிதியுதவித் திட்டத்தில் முறைகேடு: காவல் நிலையத்தில் வேளாண் துறையினர் புகார்

இளம்பிள்ளை, அக். 21-  சங்ககிரி ஒன்றியத்தில் விவசாயிகள் நிதியுதவித் திட்டத்தில் முறைகேடாக பணம் பெற்று திருப்பி செலுத்தாதோர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி வேளாண் துறை சார்பில் சங்ககிரி காவல் நிலையத் தில் புகார் அளிக்கப்பட்டது. பிரதமரின் விவசாயிகள் நிதியுதவித் திட்டத்தின் கீழ் சேலம் மாவட்டத்தில் தகுதி யற்ற பயனாளிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்ட தொகையைத் திரும்ப பெறு வதற்கான நடவடிக்கைகள் அதிகாரிகளால் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின் றன. இப்பணிகளில் வேளாண், தோட்டக் கலை, வருவாய் மற்றும் காவல்துறை உள் ளிட்ட துறையினர் தொடர்ந்து ஈடுபட்டு, ஒவ்வொரு நபர்களின் விவரங்களை கண்ட றிந்து அவர்களின் இருப்பிடங்களுக்கே  சென்று தகுதியற்ற முறையில் பெற்ற இந் நிதியினை உடனடியாக அவர்களின் வங்கி கணக்கில் செலுத்திடுமாறு அறிவுறுத்தி வரு கின்றனர்.

 இதன்படி திருப்பி செலுத்தியவர்கள் போக மீதமுள்ள தகுதியற்ற பயனாளிகள் உடனடியாக தாங்கள் பெற்ற நிதியை தங்க ளுடைய வங்கிக் கணக்கில் செலுத்திடுமாறு தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டும் இதுவரை செலுத்தாமல் உள்ளனர். அவ்வாறு தகுதி யற்ற முறையில் தாங்கள் பெற்ற நிதியினை வருகின்ற அக்.20 ஆம் தேதிக்குள் செலுத் திட வேண்டும். அவ்வாறு செலுத்தவில்லை என்றால் அவர்கள் மீது காவல் துறையின் மூலம் குற்றவியல் நடவடிக்கை மேற் கொள்ளப்படுமென மாவட்ட ஆட்சியர் சி.அ.ராமன் தெரிவித்திருந்தார். இந்நிலையில்  செவ்வாயன்று சங்ககிரி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிக ளில் தகுதியற்ற முறையில் நிதியுதவிப் பெற்று அதனைத் திருப்பி செலுத்தாத 243 நபர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கக்கோரி சங்ககிரி வேளாண் உதவி இயக்குநர் தேசிங்குராஜன் சங்ககிரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.