சேலம், ஜூலை 20- சேலம் மாவட்ட விவசாயிகளுக்கு நுண்ணீர் பாசனம் அமைத்திட சிறு குறு விவசாயிகள் சான்று வழங்கும் முகாம் ஜூலை 22 ஆம் தேதி முதல் 27 ஆம் தேதி வரை நடைபெறுகிறது என மாவட்ட ஆட்சியர் சி.அ.ராமன் தெரிவித்துள்ளார். இது குறித்து சேலம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்த தாவது, சேலம் மாவட்டத்தில் வேளாண்மைத் துறையில் வேளாண் பயிர்களான மக்காச்சோளம், துவரை, தென்னை, பருத்தி, கரும்பு ஆகிய பயிர்களுக்கு சொட்டு நீர் பாசன கருவிகள் ரூ.100 மானியத்தில் அமைத்து தரப்படுகிறது. நிலக்கடலை மற்றும் பயிறு வகைகளுக்கு தெளிப்பு நீர் கருவி மற்றும் மழைத்தூவான் ஆகியவை ரூ.100 மானியத்தில் வழங்கப்பட்டு வருகிறது. தோட் டக்கலை பயிர்களான மா, மரவள்ளி. பப்பாளி மற்றும் காய்கறி பயிர்களுக்கும் சொட்டு நீர் பாசனம் ரூ.100 மானியத்தில் அமைத்து தரப்படுகிறது. மேலும், மாவட்டத்தில் 2019-20 ஆம் ஆண்டிற்கு வேளாண்மை துறையின் மூலம் கரும்பு, பருத்தி, தென்னை, நிலக்கடலை மற்றும் பயறு வகை பயிர்களுக்கு 6000 எக்டர் பரப்பளவிற்கு நுண்ணீர் பாசனம் அமைத் திட ரூ.37.90 கோடி நிதி இலக்கு மற்றும் தோட்டக்கலை துறை மூலம் தோட்டக்கலை பயிர்களுக்கு 6,200 எக்டர் பரப்பளவிற்கு சொட்டு நீர் பாசனம் அமைத்திட ரூ.34.98 கோடி நிதி இலக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆக மொத்தம் 12,200 எக்டர் பரப்பளவிற்கு நுண்ணீர் பாச னம் அமைத்திட ரூ.72.88 கோடி நிதி இலக்கு பெறப் பட்டுள்ளது. எனவே, பாசன வசதிகள் (கிணறு மற்றும் போர்வெல் ) உள்ள சேலம் மாவட்ட விவசாயிகள் இத் திட்டத்தில் சேர்ந்து பயனடைய கேட்டுக் கொள்ளப் படுகிறது. மேலும், மாவட்டத்தில் தொடர்ந்து மழை பொழிவு குறைவு காரணமாக, நிலத்தடி நீர்மட்டம் குறைந்து கொண்டு வருகிறது. விவசாயிகள் தங்கள் கிணறுகளில் இருக்கும் குறைந்த அளவு நீரை கொண்டு பயிருக்கு தேவை யான நீரினை நுண்ணீர் பாசனம் மூலம் பயிரின் வேர் பகுதிக்கு நேரடியாக செலுத்துவதன் மூலம் 40 சதவிகிதம் நீரினை மிச்சப்படுத்தலாம், நுண்ணீர் பாசனத்தின் மூலம் நீரில் கரையும் உரங்கள் செலுத்துவதால் 25 சதவிகிதம் கூடுதல் மகசூல் பெறலாம். இத்திட்டத்தில் 100 சதவிகிதம் மானியத்தில் சிறு குறு விவசாயிகளும் 75 சதவிகிதம் மானியத்தில் இதர விவ சாயிகளும் பயனடையலாம். 100 சதவிகிதம் மானியத்தில் பயன்பெற சிறு குறு விவசாயி சான்று, அடங்கல், கம்ப் யூட்டர் பட்டா ஆகிய ஆவணங்களுடன் அந்தந்த வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்கள், வேளாண்மை துறை அலுவலர்கள் அல்லது இலவச தொலைபேசி எண். 1800 425 4444 மூலம் தொடர்பு கொள்ளலாம். மேலும், இத்திட்டத்தில் சிறுகுறு விவசாயிகள் பயன் பெறும் வகையில் சேலம் மாவட்டத்தில் அனைத்து வட் டங்களிலும் உள்ள வட்டாட்சியர் அலுவலகங்களில் இதற்கான சிறப்பு முகாம்கள் ஜூலை 22 ஆம் தேதி முதல் ஜூலை 27 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இம்முகாமில் சிறு குறு விவசாயி சான்றிதழ்கள் வழங்கப்படும். எனவே, விவசாய பெருமக்கள் இந்த முகாம்களில் கலந்து கொண்டு சிறுகுறு விவசாயி சான்றிதழ் பெற்று நுண்ணீர் பாசன திட்டத்தில் பதிவு செய்து பயனடையலாம். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் சி.அ.ராமன் தெரிவித்துள்ளார்.