சென்னை, ஜூலை 8- விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலையொட்டி, விழுப்புரம் மாவட்டம் மற்றும் விக்கிரவாண்டி தொகுதியில் கடந்த 3 ஆண்டுகளில் அரசு சார்பில் நிறைவேற்றப் பட்ட திட்டங்கள் குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள் ளார். அதில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது:
“முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் 63 ஆயி ரத்து 168 மாணவர்களும், விக்கிரவாண்டியில் மட்டும் 10 ஆயிரத்து 651 மாணவர்களும் சூடான, சுவையான சிற்றுண்டி உட்கொண்டு கல்வி யைத் தொடர்கின்றனர்.
‘முதல்வரின் முகவரி’ திட்டத்தில் 1 லட்சத்து 27 ஆயிரத்து 223 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு, 1 லட்சத்து 24 ஆயிரத்து 356 மனுக் களுக்கும், விக்கிரவாண்டி தொகுதியில் மட்டும் 21,093 மனுக்கள் பெறப்பட்டு தீர்வு காணப்பட்டு பொதுமக்கள் பயன் பெற்றுள்ளனர்.
இல்லம் தேடி கல்வித் திட்டத்தில் 1 லட்சத்து 29 ஆயிரத்து 29 மாணவர்கள் சேர்க்கப்பட்டு, 7 ஆயிரத்து 750 பெண் தன்னார்வலர்கள் மூலம் பயன் பெறுகின்றனர். விக்கிரவாண்டியில் 328 மாணவ - மாணவிகள் 83 தன்னார்வலர்கள் மூலம் பயனடைகின்றனர்.
மகளிருக்குக் கட்டணமில்லா ‘விடியல் பேருந்து பயணத் திட்டத்’தில் 6 கோடியே, 92 லட்சத்து 89 ஆயிரத்து 206 முறையும், விக்கிர வாண்டியில் 3 கோடியே 89 லட்சத்து 96 ஆயி ரத்து 648 முறையும் மகளிர், திருநங்கையர், மாற்றுத் திறனாளிகள் பயணம் செய்துள்ளனர்.
‘நான் முதல்வன்’ திட்டத்தில் 39 ஆயிரத்து 186 இளைஞர்கள் பயனடைந்துள்ளனர். கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் 3 லட்சத்து 49 ஆயிரத்து 257 குடும்பத் தலைவி களும், விக்கிரவாண்டியில் 53 ஆயிரத்து 375 குடும்பத் தலைவிகளும் மாதம் 1,000 ரூபாய் பெற்று மகிழ்கின்றனர்.
5 பவுன் நகைக் கடன் தள்ளுபடி திட்டத்தில் ரூ. 90 கோடியே 13 லட்சம் நகை கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டு 20,799 குடும்பங்களும், விக்கிரவாண்டியில் ரூ. 8 கோடியே 50 லட்சம் நகை கடன் தள்ளுபடி செய்யப்பட்டு 1,633 குடும்பங்களும் பயனடைந்துள்ளனர்.
இப்படி கடந்த மூன்று ஆண்டுகளில் திமுக ஆட்சியில் தமிழ்நாடு அனைத்து வகையிலும் முன்னேற்றம் கண்டு சிறந்த மாநிலமாக திகழ்வது போல், தமிழ்நாட்டில் விழுப்புரம் மாவட்டத்தில் சிறப்பான பல திட்டங்கள் செயல்படுத்தப்படுவதால், இம்மாவட்டம் முன்னேற்றத் திசையில் நடைபோடுகிறது. விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதியும் சிறப்பான முன்னேற்றம் கண்டுள்ளது” என்று பட்டியலை வெளியிட்டுள்ளார்.