சென்னை, ஜூன் 18 - சென்னை மற்றும் புறநகர் முறைசாரா தொழிலாளர் சங்கத்தின் மதுரவாயல் பகுதி ஆண்டு பேரவை அண்மையில் நடைபெற்றது. பகுதி தலைவர் ஆர்.துளசி தலைமையில் நடைபெற்ற இப்பேரவையில் சங்கத்தின் தென்சென்னை மாவட்டத் தலைவர் டி.ஏ. லதா, பொதுச் செயலாளர் வி. செந்தில்குமார், துணைச் செயலாளர் கே.குணசேகரன், சிஐடியு பகுதி ஒருங்கிணைப்பாளர் கே.ரத்தினகுமரன் உள்ளிட்டோர் பேசினர். பகுதிச் செயலாளர் எஸ். சித்ரா வேலையறிக்கை சமர்பித்தார். பகுதி நிர்வாகிகள் ஆ.வசந்தி, எஸ்.ஆதிமூலம் உள்ளிட்டோர் பேசினர். பகுதி தலைவராக எம். நடராஜன், செயலாளராக எஸ். ஆதிமூலம், பொருளாளராக எஸ். மனோன்மணி ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.