tamilnadu

img

குழந்தையை இழந்த பெற்றோரிடம் ரூ.14 லட்சம் கறக்க முயற்சி தனியார் மருத்துவமனையின் மனிதநேயமற்ற செயல்

சென்னை எர்ணாவூர் பாரதியார் நகரை சேர்ந்தவர் அருண்ராஜ் (வயது 32). இவரது மனைவி அமிர்தா  (வயது 26). கருவுற்று 6 மாதமான நிலை யில் அமிர்தா தொடர் பரிசோத னைக்காக ஜூலை 23ந் தேதி திரு வொற்றியூர் ஆகாஷ் மருத்துவ மனைக்கு சென்றுள்ளார். அவரை பரி சோதித்த மருத்துவர், குழந்தையின் இதய வளர்ச்சி குறைவாக உள்ளதாக கூறி உடனடியாக அறுவை சிகிச்சை செய்து பிரசவம் பார்த்துள்ளார்.

குழந்தைக்கு தீவிர சிகிக்சை அளிக்க ஆம்புலன்ஸ் மூலம், சைதா ப்பேட்டை சின்னமலையில் உள்ள ரெயின்போ சில்ரன்ஸ் மெடிக்கல் நிறுவனத்திற்கு உட்பட்ட பர்த்ரைட் மகளிர் மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். இங்குள்ள மருத்து வர்கள் குழந்தைக்கு 4 லட்சம் ரூபாய் வரை செலவாகும் என குழந்தையின் தந்தையிடம் தெரிவித்துள்ளர். 1.20 லட்சம் ரூபாய் பணமாக கட்டியுள்ளார். 2.70 லட்சம் ரூபாயை இன்சூரன்ஸ் மூலம் எடுத்துக் கொண்டுள்ளனர்.

ஊசி விலை 50ஆயிரம் ரூபாய்

ஒருவாரத்திற்கு பிறகு குழந் ந்தைக்கு செரிமானக் கோளாறு ஏற்பட்டுள்ளது. உடலில் ரத்த உறைவு தன்மை குறைவாக உள்ளது. சிறு நீரகம் சரியாக வேலை செய்ய வில்லை. இதற்காக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். 50 ஆயிரம் ரூபாய் மதிப்புடைய சிறப்பு வகை ஊசி செலுத்த வேண்டும் என தினசரி ஒரு சிகிச்சை அளிப்பதாக தெரிவித்து ள்ளனர். மேலும், ரத்த வங்கியில் இருந்து ரத்தம் வாங்க சில ஆயிரம் ரூபாயை அருண்ராஜை செலவிட வைத்துள்ளனர்.

இதன்பிறகு, சிகிச்சையின் 17ஆம் நாளான ஆக.10ந் தேதி அருண்ராஜ் மற்றும் உறவினர்கள் குழந்தையை பார்க்க அனுமதித்துள்ளனர். அப்போது, 17 நாள் குழந்தைக்கு சிகிச்சை அளித்த வகையில் மருந்து செலவு ரூ.2.57 லட்சம், நுகர்பொருள் ரூ.75 ஆயிரம், மருத்துவ உபகர ணங்கள் ரூ.3.20 லட்சம், பரிசோதனை கட்டணம் ரூ.2.57 லட்சம், மருத்துவர் கட்டணம் ரூ.69 ஆயிரம், ஆலோசனை கட்டணம் ரூ.31 ஆயிரம் என 13.56 லட்சம் ரூபாய் செலுத்த வேண்டும். ஏற்கெனவே செலுத்தியது மற்றும் இன்சூரன்ஸ் தொகையை தவிர்த்து  சுமார் 10 லட்சம் ரூபாய் செலுத்த வேண்டும் என்று கூறினர்.

இதனையறிந்து மருத்துவ மனைக்கு சென்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் அனைத்திந் திய ஜனநாயக மாதர் சங்க தலை வர்கள் மருத்துவர் மற்றும் நிர்வாக த்துடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து ஒரு மணி நேரத்தில் குழந்தை இறந்துவிட்டதாக அருண்ரா ஜியிடம் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்ததோடு, பணத்தை செலுத்தி விட்டு குழந்தையின் உடலை பெற்றுக் கொள்ளுமாறு கூறியது.

இந்நிலையில் ஞாயிறன்று (ஆக.11)  மருத்துவமனைக்கு சென்ற மார்க்சிஸ்ட் கட்சியின் மத்தியசென்னை மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.முருகன், திருவொற்றியூர் பகுதிச் செயலாளர் கதிர்வேல், சைதாப்பேட்டை பகுதி நிர்வாகிகள் ஜோசப், கே.மணி கண்டன், ஒய்.இஸ்மாயில், மாதர் சங்க தலைவர்கள் ம.சித்ரகலா, எஸ்.சரவண செல்வி, ஜெ.ஜூலியட், பாக்கியம் மற்றும் உறவினர்கள் உடலை வாங்க மறுத்து, மருத்துவமனை வாயிலி லேயே அனைவரும் அமர்ந்து விட்டனர். செய்தி  சேகரிக்க ஊடகங்க ளும் வரத்தொடங்கினர். அதனைத் தொடர்ந்த மருத்துவமனை நிர்வாக பொறுப்பாளர் ஹேமா, சிபிஎம், மாதர் சங்க தலைவர்களை அழைத்துப் பேசினார். கட்டணத்தை முழுமையாக ரத்து செய்து, உடலை ஒப்படைத்தார்.

 இதே மருத்துவமனையில்  குறைபிரசவத்தில் இரட்டை குழந்தை பெற்ற பெற்றோர், அந்தக் குழந்தைகள் இறந்துபோன நிலை யில், 4 லட்சம் ரூபாய் கட்டணம் செலுத்த முடியாமல் தவித்தது வேதனையளி ப்பதாக இருந்தது. கொரோனா காலத்தில் ஒவ்வொரு சிகிச்சைக்கும் தனியார் மருத்துவமனைகள் எவ்வளவு கட்டணம் வசூலிக்க வேண்டும் என அரசு நிர்ணயித்தது. அதுபோல், குழந்தைகளுக்கான சிகிச்சைக ளுக்கும் கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும்.அதை வெளிப்படையாக அறிவிக்கவேண்டும். மருத்துவமனை களிலும் போர்டுகளில் எழுதிவைப்ப தோடு அறுவை சிகிச்சைக்கு முன்பு  முழு கட்டணத்தை தெரிவிக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலி யுறுத்தியுள்ளனர்.