காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் போக்குவரத்து சங்க பேரவையில் தீர்மானம்
போக்குவரத்து சங்க பேரவையில் தீர்மானம்
கடலூர், ஜூன் 18- தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சிஐடியு கடலூர் மண்டல ஆண்டு பேரவை கூட்டம் நெய்வேலியில் நடைபெற்றது. துணைத் தலைவர் ஏ. தேவராஜுலு கொடியேற்றினார். தலைவர் எஸ்.மணிகண்டன் தலைமை தாங்கினார். துணை பொது செயலாளர் எஸ்.ராமமூர்த்தி வரவேற்றார். சிஐடியு மாவட்டச் செயலாளர் டி.பழனி வேல் தொடங்கி வைத்து பேசினார். பொதுச்செய லாளர் பி.முருகன் செயலாளர் அறிக்கையும், பொருளாளர் எம்.அரும்பாலன் நிதிநிலை அறிக்கையும் சமர்ப்பித்தனர். நிர்வாகிகள் ஜி.பாஸ்கரன் சிறப்பு தலைவராகவும், எஸ்.ராமமூர்த்தி தலைவராகவும், பி.முருகன் பொதுச் செயலாளராகவும், எம்.அரும்பாலன் பொருளாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். தீர்மானம் போக்குவரத்து கழகத்தில் உள்ள 25 ஆயிரம் காலி பணியிடங்களை வேலைவாய்ப்பு அலு வலகத்தின் மூலம் நிரப்பிட வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. விழுப்புரம் கோட்டத்தில் பண்டிகை நாட்களில் தனியார் பேருந்தை வாடகை எடுத்து இயக்கும் முடிவை கைவிட வேண்டும் என்றும் தீர்மானம் நிறை வேற்றினர். வாரிசுக்கு வேலை அனைத்து பிரிவுகளிலும் உடனடியாக நியமனம் செய்ய வேண்டும் என்றும், ஓய்வு பெறும் தொழிலாளியை வெறும் கையோடு அனுப்புவதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும் கோரப்பட்டது. பெருநகரங்களில் மின்சார பேருந்தை தனியார் இயக்கும் முடிவை அரசு கைவிட வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.