கல்பாக்கம் அருகே தற்காலிக பாலத்தின் மேல் மழைநீர் செல்வதால் போக்குவரத்து நிறுத்தப்பட்டு மாற்றுப்பாதையில் வாகனங்கள் செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டள்ளது. இதனால் வெங்கம்பாக்கம் முதல் புதுப்பட்டினம் பகுதி வரையில் உள்ள ஈ.சி.ஆர் சாலையில் வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் வெங்கம்பாக்கம் பகுதியில் இருந்து சதுரங்கப்பட்டினம் சென்று கல்பாக்கம் நகரியப்பகுதி வழியாக வாகனங்கள் மாற்று வழியில் இயக்கப்படுகிறது.