சென்னை, செப்.5- கேரள அரசை பின்பற்றி தமிழகத்திலும் கடைகளில் பணியாற்றும் ஊழியர்கள் பணிக்கு பாதிப்பில்லாமல் அமர் வதற்கு பொருத்தமாக இருக்கை வசதிகள் அமைக்க சட்டத் திருத்தம் கொண்டு வர முடிவெடுக் கப்பட்டுள்ளது. மாநில தொழிலாளர் ஆலோ சனை வாரிய 68வது கூட்டம் புத னன்று (செப். 4) சென்னையில் தொழிலாளர் துறை அமைச்சர் நிலோபர் கபில் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தொழிலாளர் ஆணையர் இரா. நந்தகோபால், தொழிற்சங்க பிரநிதிநிதிகளாக ஜி.சுகுமாறன் (சிஐடியு),டி.எம்.மூர்த்தி(ஏஐடியுசி), முருகேசன் (ஐஎன்டியுசி), குமார தாஸ் (பிஎம்எஸ்), வேலையளிப் போர் பிரதிநிதிகள், அரசுத்துறை இயக்குநர்கள், தொழிலாளர் துறை இணை, துணை ஆணை யர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் நிர்ணயிக்கப் பட்ட கால வேலைவாய்ப்பு (பிக்சட் டேர்ம் எம்பிளாய்மென்ட்) விவகா ரத்தில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், ஜவுளி தொழில் ஈடுபடுவோர் மற்றும் தரவு உள்ளீடு செயல்பாட்டாளர்கள் (டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர்) ஆகியோருக்கு குறைந்தபட்ச கூலி நிர்ணயித்தல் குறித்து விவாதிக்கப்பட்டது. தொழிற்சங்க பதிவு சான்று தொலைந்து போனால் இதர சான்றுகள் நகல் வழங்குவது, பெண்கள் வேலைவாய்ப்புக் களுக்கென்று தனியாக ஒரு விரிவான சட்டம் கொண்டு வருதல் குறித்தும் கூட்டத்தில் விவாதிக் கப்பட்டது. துணி கடைகள், திரை அரங்கம், அங்காடிகள், பொழுதுபோக்கு பூங்காக்கள் போன்றவற்றில் நின்று கொண்டே பணியாற்றும் தொழிலாளர்கள் பணி பாதிக்கப் படாமல் அமர்வதற்கு கேரள அரசு சட்டம் கொண்டுவந்துள்ளது.