சென்னை, ஜூலை 18- தமிழகத்தில் உள்ள அனைத்து ரேசன் கடை களுக்கும் ஜூலை 20 அன்று விடுமுறை விடப்படுவதாக மாநில அரசு அறிவித்துள் ளது.
மகளிர் உரிமைத் தொகை திட்டப் பணிகளுக் காக ரேசன் கடை பணியாளர் கள் வேலை செய்த நிலை யில், அதற்கு ஈடாக விடு முறை விடப்படுவதாக உண வுப் பொருள் வழங்கல், நுகர்வோர் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது. 2 நாட்கள் பணிக்காலத்தை ஈடு செய்யும் வகையில், கடந்த ஜூன் 15 ஆம் தேதி ஒரு நாள் விடுப்பு வழங்கப்பட்ட நிலையில், இந்த மாதம் நாளை விடுமுறை விட தமி ழக அரசு உத்தரவிட்டுள்ளது.