tamilnadu

img

பணி நிரந்தரம் செய்யக்கோரி தூய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

சென்னை, ஜூன் 26- கொரோனா காலத்தில் உயிரை பணயம் வைத்து பணியாற்றிய தூய்மை பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை மாநகராட்சி செங்கொடி சங்கம் (சிஐடியு) சார்பில் ஓட்டேரி பட்டாளத்தில் உள்ள 6வது மண்டல அலுவலகம் முன்பு புத னன்று (ஜூன் 26) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மண்டலத் தலைவர் சி.பெருமாள் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பொதுச்செயலாளர் சீனிவாசலு, தலைவர் ஜெ.பட்டாபி, சிஐடியு நிர்வாகிகள் ஆர்.மணி மேகலை, தயாளன், இரா.அருள்குமார், சங்க நிர்வாகிகள் முனுசாமி, ராஜன், ராஜேந்திரன், குமார், ஏ.எஸ்.அலெக்சாண்டர் ஆகி யோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். இதில் 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். இதுகுறித்து பொதுச்செயலாளர் சீனிவாசலு கூறுகையில், கொரோனா காலத்தில் தங்களது உயிரை பணயம் வைத்து பொதுமக்களுக்கு சேவை செய்த என்எம்ஆர், என்யூஎல்எம், மலேரியா பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள் இதுவரை பணி நிரந்தரம் செய்யப்படவில்லை.

தனி யார்மய கொள்கையை கைவிட்டு அனைத்து தொழிலாளர்களையும் மாநகராட்சி ஊழியர்களாக மாற்ற வேண்டும். ஈட்டிய விடுப்பு மற்றும் விடுபட்ட 21 மாத நிலுவைத் தொகையை காலம் தாழ்த்தாமல் உடனடியாக வழங்க வேண்டும். அரசாணை (2டி) 62இன் படி அனைத்து துறை என்யூஎல்எம் தொழிலாளர்களுக்கு திருத்திய பஞ்சப்படியை 1.4.2024 முதல் உயர்த்தி, நாள் ஒன்றுக்கு ரூ.753 நிலுவைத் தொகையுடன் ஊதியம் வழங்க வேண்டும்.

தரமற்ற உதிரி பாகங்கள் மூலம் வாகனங்கள் பராமரிக்கப்படுவதால் அடிக்கடி வாகனங்கள் பழுதடைகிறது. எனவே தரமான உதிரி பாகங்களை கொண்டு அனைத்து வாகனங்களையும் பராமரிக்க வேண்டும். தொழிலாளர்களுக்கு கடந்த நவம்பர் மாதம் சீருடை வழங்கப்பட்டது. ஆனால் பகுதி 16இல் மட்டும் அதற்கான தையல் கூலி வழங்கப்படவில்லை. உடனடியாக தையல் கூலியை வழங்க வேண்டும். கோட்டம் 68, 71, 72 ஆகியவற்றில் கழிவறை வசதி இல்லாததால் தொழி லாளர்கள் கடும் சிரமத்திற்கு ஆளா கிறார்கள்.

எனவே கழிவறை வசதியை ஏற்படுத்த வேண்டும். அன்னக்கூடை, துடைப்பம், ஓடு, கையுறை உள்ளிட்ட பணி உப கரணங்களை முறையாக வழங்க வேண்டும். இல்லையென்றால் ஒட்டு மொத்த தொழிலாளர்களையும் திரட்டி மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என்றார்.