டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வில் வெற்றி பெற்றவர்களின் இறுதிப் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
துணை ஆட்சியர், காவல் துறை துணை கண்காணிப்பாளர், வணிகவரி உதவி ஆணையர் உள்ளிட்ட 66 காலிப்பணியிடங்களுக்கான குரூப் 1 முதல்நிலைத் தேர்வை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், கடந்த ஆண்டு ஜனவரி மாதம் நடத்தியது.
இதையடுத்து கடந்த மார்ச் 4ஆம் தேதி முதல் 6 ஆம் தேதி வரை, முதன்மைத் தேர்வு நடைபெற்றது.
இதில் தேர்ச்சியானவர்கள் ஜூலை 13,14,15 ஆகிய தேதிகளில் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டனர்.
இன்றுடன் நேர்காணல் முடிவடைந்ததையடுத்து குரூப்-1 தேர்வில் வெற்றி பெற்றவர்களின் இறுதிப்பட்டியலை https://www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த லாவண்யா முதல் இடத்தை பிடித்துள்ளார்.
66 காலி பணியிடங்களுக்காக நடத்தப்பட்ட தேர்வில் பெண்கள் அதிக இடங்களை பிடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.