“அதிகாரத்தில் உள்ளவர்கள் ஒரு சட்டம் போடும்போது பலன் பெறுபவர்களை விட பாதிக்கப்பட்டவர்களை பற்றியே யோசிக்க வேண்டும். அந்த வகையில், இந்தப் படம் பாதிக்கப்பட்டவர்களை பற்றி பேசுகிறது. மேலும் பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளின் கல்விக்காக அதிகம் செலவிடுகின்றனர். அந்தக் கல்விக்காக பெற்றோர்படும் கஷ்டங்களை ரத்தமும், சதையுமாக கூறியுள்ளோம்” என விரைவில் வரவுள்ள ‘அஞ்சாமை’ படத்தின் இயக்குநர் சுப்புராமன் குறிப்பிட்டுள்ளார்.