tamilnadu

img

தீக்கதிர் விநியோகஸ்தர் தோழர் ஜான் விக்டர் காலமானார்

சென்னை,மார்ச் 23-  தீக்கதிர்  விநியோகிப்பதை முதல் பணியாகக் கொண்டு செயல்பட்டு வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தோழர் ஜான் விக்டர் உடல்நலக்குறைவால் சென்னையில்  திங்களன்று (மார்ச் 23) காலமானார். அவருக்கு வயது 72. அவருக்கு எஸ்தர் என்ற மனைவியும்  இரண்டு மகள்கள் ஒரு மகனும் உள்ளனர்.  இயக்கப்பணிகளோ பெரும்பாலான இயக்கங்களில் பங்கு பெறுபவர். இதோடு கட்டுமான சங்க பகுதி பொருளாளராகவும் செயல்பட்டு வந்தார். சென்னை பெரம்பூர் லொகோ அருகில் உள்ள ஜி.கே.எம் காலனி கட்சி கிளை செயலாளராகப் பல ஆண்டுகள் பணியாற்றியவர்.  பகுதி மக்களின் அடிப்படை பிரச்சனைகளுக்காக நடைபெற்ற பல போராட்டங்களில் தவறாமல் பங்கேற்றவர். பெஸ்ட் அண்ட் கிராம்டன் ஆலையின் முன்னாள் ஊழியரான அவர் தொழிற்சங்க இயக்கத்திலும் தீவிரமாகச் செயல்பட்டவர்.   இயக்கப் பணியை முழுமூச்சாகக் கொண்டு செய்தவர். கடைசி வரை தீக்கதிரை அதன் வாசகர்களுக்குக் கொண்டு செல்லும் பணியிலும் சந்தா வசூலிப்பதிலும் அயராது ஈடுபட்டார். பழகுவதற்கு இனிமையானவர். எளிமையான வாழ்க்கையை வாழ்ந்த அவர் அப்பகுதி மக்களின் அன்பைபெற்றவர். அவரது இறுதி நிகழ்ச்சிகள் செவ்வாயன்று (மார்ச் 24) காலை 10 மணிக்கு ஜி.கே.எம் காலனி சுடுகாட்டில்  நடைபெறும் என்று குடும்பத்தினர் தெரிவித்தனர்.