சென்னை, மே 5- காவல்துறை மற்றும் நீதித்துறை யில் பணிபுரியும் பெண்களை இழிவு செய்தும், அவதூறாகவும் பேசியுள்ள ‘சவுக்கு’ சங்கருக்கு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக சங்கத்தின் மாநி லத் தலைவர் எஸ்.வாலண்டினா, மாநில பொதுச்செயலாளர் அ. ராதிகா ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: “அண்மையில் தனியார் யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்த சவுக்கு சங்கர் என்பவர், காவல்துறை அதி காரிகளை விமர்சிப்பதன் ஊடே, அத் துறையில் பணிபுரியும் பெண்கள், உயர் அதிகாரிகளிடம் பதவி உயர் வுக்காக பாலியல் ரீதியான சமரசங் களை செய்து கொள்வதாக மிக மோச மாக விமர்சனம் செய்திருந்தார்.
இதற்கு முன்பும், நீதிபதிகளிடம் பணியாற்றும் பெண் உதவியாளர் கள், வேலை செய்ய வேண்டிய அவ சியம் இல்லாமல் பணம் சம்பாதிப்ப தற்காக பாலியல் உறவுகளைப் பயன் படுத்துகிறார்கள் என்று கூறியிருந் தார். இந்த பேச்சு, காவல்துறையில் - நீதித்துறையில் பணிபுரியும் பெண் களை மட்டுமல்லாது ஒட்டுமொத்த மாக வேலைக்குச் செல்லக்கூடிய பெண்களைப் பற்றிய மிக மோசமான கருத்தாக அனைத்திந்திய ஜன நாயக மாதர் சங்கம் கருதுகிறது.
ஏற்கனவே இதுபோன்ற பிற் போக்குத்தனமான கருத்துக்களை எஸ்.வி.சேகர், குருமூர்த்தி, போன் னோர் பேசி, காவல்துறையால் வழக்குப் பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று நீதிமன்றத் தால் கண்டிக்கப்பட்டும் உள்ளனர். இச்சூழலில் சவுக்கு சங்கரின் இத்தகைய பேச்சு பணிக்குச் செல் லக்கூடிய பெண்களை இழிவு செய்வதாக உள்ளது. காவல்துறை போன்ற ஆண் களுக்கு சவால் விடும் துறையில் பணி யாற்றக்கூடிய பெண்கள், பல்வேறு சிரமங்களைச் சந்தித்து பணிபுரிந்து வருகின்றனர்.
சட்டம் - ஒழுங்கு, குற் றப் பிரிவு, அலுவல் சார் பணிகள் என இரவு - பகல் பாராது அவர்கள் பணி யாற்றிக் கொண்டிருக்கக் கூடிய நிலையில், பெண் ஊழியர்களை பாலியல் சமரசங்களை செய்து உயர் பதவிகளை அடைகிறார்கள் என தரம் தாழ்ந்து பேசுவதை அனு மதிக்க முடியாது. தனிப்பட்ட காவல்துறை அதி காரிகளை அல்லது நீதிபதிகளை விமர்சிப்பது அல்லது அவதூறு செய் வது என்ற பெயரில் சம்பந்தப்பட்ட துறையில் உள்ள பெண்களை சவுக்கு சங்கர் அவமதிப்பு செய்துள்ளார்.
தொடர்ச்சியாக இதுபோன்ற அறமற்ற விமர்சனங்களையும், கருத்துகளையும் பேசி வரும் சவுக்கு சங்கருக்கு தமிழகத்தில் பெண்ணுரி மைக்காக குரல் கொடுத்து வரும் அனைத்து பெண்களோடு ஜன நாயக மாதர் சங்கமும் இணைந்து தனது வன்மையான கண்டனங்க ளைத் தெரிவிக்கிறது.” இவ்வாறு அறிக்கையில் குறிப்பி டப்பட்டு உள்ளது.