சென்னை, அக்.29- மருத்துவப் படிப்பிற்கான முதல் கட்ட கலந்தாய்வு அக்.29 ஆம் தேதியோடு நிறைவுபெற்றது. 2-வது கட்டம் நவம்பர் 7ஆம் தேதி தொடங்குகிறது. மருத்துவப் படிப்பு மொத்தம் 5 ஆண்டுகள் படிக்க வேண்டும். அதில் 4 ஆண்டுகள் பாடப்புத்தகங் களுடன் பயிற்சியும், ஒரு ஆண்டு முழுமையான பயிற்சியும் அளிக்கப் படுகிறது. அரசுப் பள்ளிகளில் தமிழ் வழியில் படித்து மருத்துவ படிப்புகளில் சேரும் மாணவர் களுக்கு வசதியாக எம்.பி.பி.எஸ். பாடப்புத்தகம் தமிழில் தயாரிக்கப் படுகிறது. 4 பாடப் புத்தகங்கள் மொழி பெயர்க்கப்பட்டு டிசம்பர் மாதத்திற்கு முன் வழங்கப்பட உள்ளது. தமிழ்வழி மாணவர்களுக்கு சிறந்த கருத்தியல் தெளிவு மற்றும் புரிதலை வழங்க தமிழ்நாடு பாட நூல் கழகம் மற்றும் கல்வி சேவை கள் கழகம் ஆகியவை இணைந்து மருத்துவ பாடப் புத்தகங்களை தமிழில் வெளியிட திட்ட மிட்டுள்ளது. முதலாவதாக மாணவர்களுக் கான கிரேஸ் அனாடமி கைட்டன் மற்றும் ஹால் டெக்ஸ்ட் புக் ஆப் மெடிக்கல் பிசியாலஜி, பெய்லி அண்ட் லவ்ஸ் ஹார்ட் பிராக்டிஸ் ஆல் சர்ஜரி (தொகுதி1) மற்றும் முதலியார் மற்றும் மேனனின் மருத்துவ மகப்பேறியியல் ஆகிய 4 புத்தகங்கள் தமிழில் மொழி பெயர்க்கப்படுகின்றன. மாநிலம் முழுவதும் கடந்த ஒரு வருடமாக 30 பேராசிரியர்கள் மற்றும் பயிற்சி மருத்துவர்கள் ஆங்கில பாடப் புத்தகங்களை மொழி பெயர்க்கும் பணியில் ஈடு பட்டுள்ளனர்.