சென்னை, செப்.20 - காலி பாட்டில் திரும்பப் பெறும் திட்டத்தை எதிர்த்து தமிழ்நாடு அரசு மேல்முறை யீடு செய்ய வேண்டும் என்று டாஸ்மாக் ஊழியர் சங்கம் வலியுறுத்தி உள்ளது. மனமகிழ் மன்றங்களில் தனியார் மதுக்கடைகள் அமைக்க அனுமதி அளிக்க கூடாது. மாநிலம் முழுவதும் சுமார் 2 ஆயிரம் தனியார் மது குடிப்பங்களை திறந்து அரசுக்கு வரும் வருவாயை தனியாருக்கு மடை மாற்றம் செய்வதை கைவிட வேண்டும். 20 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றும் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்து, காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், நீதிமன்ற உத்தரவின்படி 480 நாட்கள் பணி முடித்த வர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வெள்ளியன்று (செப்.20) சென்னையில் மக்கள் சந்திப்பு இயக்கம் நடைபெற்றது. கிண்டி தொழிற்பேட்டை பேருந்து நிலையத்தில் சிஐடியு தென்சென்னை மாவட்டச் செயலாளர் பா.பாலகிருஷ் ணன் மக்கள் சந்திப்பு இயக் கத்தை தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் டாஸ்மாக் ஊழியர் சங்கத்தின் சென்னை மாவட்ட நிர்வாகி கள் ஜி.சதீஷ், எஸ்.வடி வேலு, பி.பாக்யராஜ், வி.எஸ்.பன்னீர்செல்வம், கார்த்திகேயன், விஜய ராஜ், சுரேஷ்பாபு, விஜய் வெங்கடேஷ், செந்தில் வேல், முருகன், விஜயன், அருணாச்சலம் உள்ளிட் டோர் கலந்து கொண்டனர்.