சென்னை, செப். 11 - முதற்கட்டமாக 5 ஆயிரம் சிறு பாசன ஏரி, குளங்களைத் தூர்வாரு வதற்கு தமிழ்நாடு அரசு ரூ. 500 கோடியை அனுமதித்திருக்கிறது.
நீர்நிலைகளைத் (ஏரி, குளங்கள்) தூர்வாரி, மழைநீரை சேகரித்து நீர் மேலாண்மை செய்வதற்கு முன்னு ரிமை அளித்து பல்வேறு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வரு கிறது. அதன் தொடர்ச்சியாக, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 22 ஆயிரத்து 51 சிறுபாசன ஏரிகளில், முதற்கட்டமாக நடப்பு ஆண்டில் ரூ. 500 கோடியில் 5 ஆயிரம் சிறுபாசன ஏரிகளை புன ரமைப்பதற்காக கடந்த செப்டம்பர் 5-ஆம் தேதியன்று அரசாணை வெளி யிடப்பட்டது.
அதன்படி, சிறுபாசன ஏரிகளை, இயந்திரங்களைப் பயன்படுத்தி தூர்வாருதல், ஆழப்படுத்துதல், உபரி நீர் போக்கி (கலிங்கல்), மதகு போன்ற அனைத்து கட்டமைப்புகளையும் பழுதுபார்த்தல், புனரமைத்தல், இணைப்பு வரத்து வாய்க்கால்களை தூர்வாருதல் ஆகியவற்றை பொது மக்கள் பங்கேற்புடன் செயல்படுத்து வது இத்திட்டத்தின் முக்கிய நோக்க மாகும். இத்திட்டம், அரசு மற்றும் அரசு சாரா நிறுவனம், சமூக அமைப்புகள், விவசாயிகள் சங்கம், கல்வி நிறு வனங்கள் போன்றவற்றில் சொந்த நிதி ஆதாரம் மற்றும் மக்கள் பங்களிப்புடன் கூடிய ‘நமக்கு நாமே’ திட்டம் மூலமாக வும் மற்றும் மீதமுள்ள சிறுபாசன ஏரி களுக்கு அரசு நிதி மற்றும் ஊராட்சி அமைப்புகளின் நிதியின் மூலமாகவும் பணிகள் நிறைவேற்றப்படும் என்று ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.