சென்னை, நவ.26- பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் மாநிலங்களில் தமிழ்நாடு முன்னிலை வகிக்கிறது என்று சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது; பெண்களுக்கான உரிமைகளைக் காப்பது போலவே அவர்களது கண்ணி யத்தையும் பாதுகாப்பையும் உறுதி செய்வதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு உறுதியாக இருக்கிறது.
பெண்கள் சுதந்திரமாகவும், பாதுகாப்பாகவும் தங்களுடைய பணி களை மேற்கொள்வதற்கான சூழல் தமிழ் நாட்டில் நிலவுவதால் தான் தமிழ் நாட்டில் பெண்கள் மிக அதிக அளவில் கல்வி கற்கிறவர்களாகவும், வேலைக்குச் செல்பவர்களாகவும், சுயமானவர்களாக வும் உள்ளனர். இந்தியாவில் உற்பத்தித் துறையில் உள்ள பெண்களில் கிட்டத்தட்ட பாதிப்பேர், அதாவது 43 விழுக்காட்டினர் தமிழ்நாட்டில் பணியாற்றுகிறார்கள். முன்னாள் முதலமைச்சர் கருணா நிதி 1973 ஆம் ஆண்டு பெண்களை முதன்முதலாகக் காவல்துறையில் இணைத் தார்.
தமிழ்நாடு முதலமைச்ச ராக மு.க.ஸ்டாலின் பொறுப் பேற்றவுடன் பெண்களின் பாது காப்பை உறுதி செய்வதற்காக அனைத்து உட்கோட்டங்களிலும் ஒரு அனைத்து மகளிர் காவல் நிலையம் என்ற வகையில் புதிதாக காவல் நிலையங்களை திறந்து வருகிறார். தமிழ்நாட்டில் மொத்தம் 241 அனைத்து மகளிர் காவல் நிலையங்கள், 32 ஆட்கடத்தல் தடுப்புப் பிரிவுகள், 7 புலன் விசாரணைப் பிரிவுகள், 43 குழந்தை கடத்தல் தடுப்புப் பிரிவுகள் மற்றும் 39 சிறப்பு இளஞ்சிறார் காவல் பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன.
சிறார்களுக்கு எதிரான குற்றங்களைக் கையாள்வதற்கு மாநிலத்தில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையங்களில் 194 சிறார் நட்பு அறைகள் மற்றும் 1,542 குழந்தைகள் நல காவல் அலுவலர்களும் செயல்பட்டு வருகின்றனர். மாநில அளவில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கும் பொருட்டு, தடுப்புப்பிரிவு ஒன்று உருவாக்கப்பட்டு, அப்பிரிவு ஒரு கூடுதல் காவல் துறை இயக்குநர் தலைமையில் இயங்கி வரு கிறது. அதேபோல் ‘ப்ராஜக்ட் பள்ளிக்கூடம்’ திட்டம், ‘இமை கள் திட்டம்’ ஆகியவற்றின் மூலம் பள்ளிக் குழந்தைகளுக்கு விழிப்புணர்வு மற்றும் விரைவான நீதி கிடைக்க அரசு செயலாற்றி வருகிறது. மேலும் பெண்களுக்கு உதவும் வகையில் அவர்கள் தங்களது புகார்களை விரைவாக பதிவு செய்ய ‘காவல் உதவி’ செயலி முதலமைச்சரால் தொடங்கப்பட்டு இயங்கி வருகிறது. அதேபோல பெண்கள் உதவி மைய எண் 181, மற்றும் குழந்தைகளுக்கான உதவி மைய எண் 1098 ஆகியவை மிகச் சிறப்பாக செயல்பாட்டில் உள்ளன. இவற்றின் மூலம் பதிவு செய்யப்படும் குற்றங்கள் உடனடி யாக விசாரிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
பள்ளிக் குழந்தைகளுக்கு விழிப்புணர் வை ஏற்படுத்தும் வகையில் சமூக நலத் துறை, பள்ளிக்கல்வித்துறை, காவல்துறை ஆகிய மூன்று துறைகளும் தொடர்ந்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். தேசிய குற்ற ஆவணக் காப்ப கம் இறுதியாக 2022 ஆம் ஆண்டு வெளி யிட்ட அறிக்கையின்படி பெண்களுக்கு எதிராக நடைபெறும் குற்ற வழக்குகளின் எண்ணிக்கை நாடு முழுமைக்கும் லட்சத்துக்கு 65 என்றால் தமிழ்நாட்டில் 24 என்ற அளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
பாலியல் வன்புணர்வு வழக்குகளின் தேசிய சராசரி 4.6 என்ற அளவில் தமிழ்நாட்டில் 0.7 அளவில் உள்ளது. பெண்களின் சமூக வாழ்வை உயர்த்து வதற்கு ‘விடியல் பயணம்’, ‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை’ போன்ற நாட்டிற்கே முன்னோடியான திட்டங்களைச் செயல்படுத்துவதோடு மட்டுமல்லாமல் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் எதிரான குற்றங்களைத் தடுப்பதை அரசின் முக்கிய நோக்கமாகக் கொண்டு செயலாற்றுகிறது. பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான எத்தகைய வன்முறை யையும் இந்த அரசு சகித்துக் கொள்ளாது. மிகுந்த கண்காணிப்புடன் உறுதியான நட வடிக்கைகளை எப்போதும் எடுத்து வருகிறது. அதனால்தான் இந்தியா விலேயே பெண்களுக்குப் பாதுகாப்பு இருக்கும் மாநிலங்களில் தமிழ்நாடு முன்னிலையில் இருக்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.