tamilnadu

img

கிரையப் பத்திரங்கள் ரத்து நடைமுறையில் மாற்றம் தமிழக அரசு புதிய உத்தரவு

சென்னை, மே 15 - பத்திரம் என்பது ஒரு சொத்தை வாங்குவதற்கும் விற்பதற்கும் சட்டப்பூர்வ ஆவணமாகும். ஒரு சொத்து  வாங்கும் போது அதை வாங்குபவரும், விற்பவரும் இணைந்து கையெழுத்திட்டு பத்திரம் பதிவு அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்ட ஆவணம் தான் கிரயப் பத்திரம் எனப்படுகிறது. 

ஒரு சொத்தை கிரைய பத்திரமாக பதிவு செய்ய வேண்டியது கட்டாயம்.

அப்படி கிரையப் பத்திரம் பதிவு செய்யும்போது, முத்திரைத்தாள் கட்டண மாக 7 சதவிகிதம், பதிவுக் கட்டணமாக 2 சதவிகிதம் என மொத்தம் 9 சதவிகிதம் அளவிற்கு தமிழ்நாடு அரசு கட்டணம் வசூலிக்கிறது. 

அதேபோல், கிரயப் பத்திரத்தை ரத்து செய்ய முடியும். இதற்கு ரூ. 50 கட்டணம் செலுத்தி இரு தரப்பும் சேர்ந்து  ரத்து ஆவணம் பதிவு செய்ய வேண்டும். ஆனால் கிரயப் பத்திரத்தை ரத்து  செய்வதால், அதன் உரிமை மாறாது. அதாவது, சொத்தை வாங்கியவர் பெயரில் தான் அந்த சொத்து இருக்கும். மீண்டும் பழைய உரிமையாளர் பெயரில் மாறாது.

இதனால், பழைய உரிமையாளர் பெயரில் சொத்தை மாற்றுவதற்கு மீண்டும் புதிதாக ஒரு கிரைய ஆவணம் பதிவு செய்ய வேண்டும். அதற்கு மீண்டும் பழையபடி 9 சதவிகிதம் பத்திரப்பதிவு கட்டணம் செலுத்த வேண்டும். 

இதனால், வீண் பண விரயம் ஏற்பட்டுவந்தது.

இந்த நிலையில், கிரைய பத்திர ரத்து  நடைமுறையில் தற்போது தமிழக பத்திரப்பதிவு துறை மாற்றம் கொண்டு வந்துள்ளது. அதன்படி, கிரயப் பத்தி ரத்தை ரத்து செய்யும் போது, “இந்த  ரத்து ஆவணத்தின் மூலம் உரிமை  மாற்றம் ஏற்படாது’ என்ற முத்திரை இனி குத்தப்படாது என்று அறிவிக்கப்பட்டுள் ளது.  இந்த புதிய நடைமுறையின் மூலம்  ஏற்கனவே சொத்து விற்பனை செய்தவர்  பெயருக்கு மீண்டும் அந்த சொத்து சென்று விடும். இந்த ரத்து ஆவணத்திற்கு ரூ. 1,000 கட்டணம் செலுத்த வேண்டும். 

;