tamilnadu

கூடுதல் கட்டணம்: புறநகர் ஏசி மின்சார ரயில் சேவைக்கு மவுசு குறைகிறது

கூடுதல் கட்டணம்: புறநகர் ஏசி மின்சார  ரயில் சேவைக்கு மவுசு குறைகிறது

சென்னை, ஜூன் 19- சென்னை கடற்கரை முதல் தாம்பரம் வழியாக செங்கல்பட்டு வரை ஏசி மின்சார ரயில் இயக்கப் படுகிறது. கடற்கரையில் இருந்து 30 கி.மீ. தூரத்தில் உள்ள தாம்பரத்திற்கு ரூ.85 கட்டணம் நிர்ணயிக்க ப்பட்டுள்ளது. அதேபோல் சென்னை கடற்கரை முதல் செங்கல்பட்டு வரை ரூ.135 பயண கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த மின்சார ரயிலில் மொத்தம் 12 பெட்டிகள் இடம் பெற்றிருக் கின்றன. ஒரே நேரத்தில் 1,220 பேர் பயணிக்க முடியும் சேவை தொடங்கி ஏறத்தாழ 3 மாதங்களான நிலையில், அதை பொது மக்கள் போதிய அளவில் பயன்படுத்தவில்லை. பெரும்பாலான நேரங்க ளில் இந்த மின்சார ரயிலில் ஆள் இல்லாமல் காற்று வாங்குகிறது. கூடுதல் கட்ட ணம் காரணமாக ஏசி மின்சார ரயிலின் வாசற் படியில் கால் வைக்கக் கூட பயணிகள் அச்சப்படு கின்றனர்.  கூடுதல் கட்டணம் காரணமாக ரயில் சேவை  தொடங்கி 3 மாதங்கள் ஆகி யும் 50 விழுக்காடு இருக்கை கள் கூட நிரம்பவில்லை. இதனால் ரயில்வேக்கு வரு வாய் இழப்புதான் ஏற்பட் டுள்ளது. குஜராத் மாநிலத்தில் பூஜ் முதல் அஞ்சார் வரை ஏசி ரயில் இயக்கப்படுகிறது. அங்கு 42 கி.மீ. தூரத்திற்கு வெறும் ரூ.55 மட்டுமே வசூலிக்கப்படுகிறது. ஆனால் சென்னையில் தாம்பரம் முதல் கடற்கரை வரை 30 கி.மீ. தூரத்திற்கு ரூ.85 வசூல் செய்கின்ற னர். மேலும் சென்னையில் 10 கி.மீட்டருக்கு ரூ.35 கட்டணம் வசூலிக்கப்படு கிறது. மேலும் சென்னை கடற்கரை முதல் செங்கல் பட்டு வரை மாதாந்திர பய ணச்சீட்டு ரூ.2,115ஆக இருக்கிறது. அதேபோல் கடற்கரை முதல் தாம்பரம் வரை மாதாந்திர பயணத் திற்கு ரூ.1,705ஆக நிர்ண யிக்கப்பட்டுள்ளது. எனவே கட்டணத்தைக் குறைத்தால் மட்டுமே ஏசி மின்சார ரயிலை பயணிகள் பயன் படுத்துவர்.