tamilnadu

அப்பல்லோ மருத்துவமனையில் அவசரகால அழைப்பு சேவை

சென்னை,ஜூன் 28 பக்கவாதம் மற்றும் அவசர மருத்துவ சிகிச்சைக்காக அப்பல்லோ மருத்துவமனையில் 24 மணி நேர ஹாட்லைன் என்ற தொலைபேசி சேவை தொடங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அம் மருத்துவமனையின் நரம்பியல் மற்றும் பக்கவாத நோய் சிறப்பு சிகிச்சை நிபுணர் டாக்டர் பிரபாஷ் கூறியதாவது:  சென்னை, வானகரம் அப்பல்லோ மருத்துவமனையில் தொடங்கப்பட்டுள்ள இந்தச் சேவையின் மூலம் பக்க வாதம் உள்ளிட்ட அவசர சிகிச்சை தேவைக்கு மருத்துவமனையை உடனடியாகத் தொடர்பு கொள்ள முடியும். பக்கவாத நோய்க்கு குறிப்பிட்ட கால அவகாசத்துக்குள் சிகிச்சை அளிக்க வேண்டும்.  அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வில், பக்க வாதத்தால் உலகம் முழுவதும் 57 லட்சம் பேரும், இந்தியாவில் 16 லட்சம் பேரும் பாதிக்கப்படுவ தாகத் தெரியவந்துள்ளது. பக்கவாதம் பாதித்த மூவரில் ஒருவர், உடல் செயலிழக்கும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் இருந்து தினமும் 30 முதல் 35 பேர் வரை பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு மருத்துவ மனைகளுக்கு வருகின்ற னர்.  இந்த நோய்க்கான அறி குறிகள் தென்படும் நான்கு மணி நேரத்தில் மருத்துவ மனையில் சிகிச்சை பெற வேண்டும். இதைக் கருத்தில் கொண்டு இந்த அவசர கால ஹாட்லைன் சேவை தொடங்கப்பட்டுள்ளது என்றார். பேட்டியின்போது, அப்பல்லோ மருத்துவ மனையின் அவசர சிகிச்சை டாக்டர் தவபழனி உடனிருந்தார்.