சென்னை, செப்.2- சென்னை சேத்துப்பட்டில் நடை பெற்ற கே.டி.சி.டி பள்ளி நூற்றாண்டு விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பேசுகையில், தேசிய பாடத்திட்டத்தை ஒப்பிடும் போது, மாநில பாடத்திட்டத் தின் தரம் குறைவாக இருப்பதாக தெரிவித்தார்.
சமூக சமய உரிமையின் அடிப்படை யில் அனைவருக்கும் கல்வி என பாலின பாகுபாடு, வகுப்புவாதம் உள்ளிட்ட பிரிவினைகள் இல்லா சமூக நீதி பகிரும் கல்வியை வழங்கும் மாநில அரசாக தமிழ்நாடு அரசு திகழ்கிறது.
அதன்படி, இந்தியாவில் மற்ற மாநி லங்களை விட தமிழ்நாட்டில் கல்வி விகிதம் பல மடங்கு உயர்ந்திருக்கிறது. கல்வி சேர்க்கையில், தேசிய சராசரி, தமிழ்நாட்டின் சராசரியை விட பின் தங்கியிருக்கிறது.
கல்வி பெற்ற இளைஞர் சமூ கத்தை, நல்ல பணிகளில் ஈடுபடுத்தும் நடவடிக்கைகளையும், “நான் முதல் வன்” உள்ளிட்ட திட்டங்கள் வழி, செய லாற்றி வருகிறது தமிழ்நாடு அரசு.
எனினும், தமிழ்நாடு அரசையும், தமிழ்நாட்டின் பெருமையையும் தொட ர்ந்து சீர்குலைக்க எண்ணும் நோக்கில், கடந்த மூன்றாண்டுகளில் இயங்கி வரும் ஆளுநர் ஆர்.என்.ரவி, தற்போது மற்றொரு வெறுப்பை உமிழ்ந்துள் ளார்.
மாநிலக் கல்வித்திட்டத்தை, தேசிய கல்வித்திட்டத்துடன் தொடர்புபடுத்தி, தமிழ்நாட்டின் பாடத்திட்டத்தை தரக் குறைவாக பேசியுள்ளார். ஆளுநரின் பேச்சுக்கு தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியும், உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி யும் பதிலடி தந்துள்ளனர்.
அமைச்சர் பொன்முடி பேசுகையில், “2006ஆம் ஆண்டிலேயே சமச்சீர் கல்வி கொண்டு வந்தது திமுக அரசு. பள்ளிக் கல்வியில் மட்டுமல்லாமல், உயர் கல்வியில் தேசிய அளவில் தமிழ்நாடு தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது.
இந்தியாவின் முன்னணி விண் வெளி ஆய்வாளர் வீரமுத்துவேல் உள்பட பலர், தமிழ்நாடு அரசின் மாநில கல்வி பயின்றவர்கள் தான். உல கத்தரத்தில் உள்ள மாநில கல்வி, சிபிஎஸ்இ-யைவிடவும் சிறந்தது. அவ்வகையில், தேசிய கல்விக் கொள்கையை ஒருபோதும் நாங்கள் ஏற்க மாட்டோம்” என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேசுகையில், “அரசு தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் மாநில பாடத்திட்டத்தை பாராட்டு கின்றனர். எனினும், ஆளுநர் தமிழ்நாட்டின் கல்வி தரம் குறித்து ஆய்வு செய்ய விரும்பினால், அவரை எங்கும் அழைத்துச்சென்று நிரூபிக்கத் தயார்” என சவால் விடுத்துள்ளார்.
‘புல் புல் பறவை’ கதை இல்லாததால் ஆளுநர் ஏமாற்றம்
மாநில பாடத்திட்டம் தரம் தாழ்ந்து இருப்பதாக ஆளுநர் ஆர். என். ரவி கூறியுள்ளார். புல் புல் பறவை சாவர்க்கரை காப்பாற்றிய கதையோ, முதலைகளிடமிருந்து மோடி தப்பித்த கதையோ தமிழ்நாட்டு பாடங்களில் இல்லை. தனக்கு பிடித்த காட்சி இல்லாத ஏமாற்றத்தை வெளிப்படுத்தும் உரிமை ஆளுநருக்கும் உண்டு என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் “எக்ஸ்” வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.