tamilnadu

img

மாநில மொழி எழுத்தாளர்களை ஊக்குவிக்க கலந்துரையாடல்

சென்னை,நவ.18- அமோசான் கிண்டில் தளத்தில் எழுத்தாளர்கள் தங்களது சிறுகதைகள், கவிதைகள், நாவல்களை நேரடியாக பதிப்பிக்கலாம். ஆரம்பத்தில் இந்த வளை தளத்தில் பெரும்பா லும் ஆங்கில எழுத்தா ளர்களே அதிகமாக கோலோச்சி வந்தனர். ஆனால் மாநில மொழி  எழுத்தாளர்களின் படைப்பு களுக்கு உலகம் முழுவதும் நல்ல வரவேற்பு உள்ளது. அதிலும் தமிழ் எழுத்தா ளர்களின் படைப்புகளை கிண்டில் வாயிலாகவும் அமேசான் வலைத்தளம் வாயிலாகவும் அமெரிக்கா, ஐரோப்பா நாடுகளில் உள்ள ஏராளமான தமிழர்கள் வாங்குகிறார்கள். இந்த நிலையில் மாநில மொழி எழுத்தாளர்களின் படைப்புகளுக்கு மொழி தடையாக இல்லை என்பதை விளக்கும் வகையிலும் மாநில மொழியில் படைப்பு களை ஊக்கப்படுத்தும் வகையிலும் சென்னையில் அமேசான் கிண்டில் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் பா.இராகவன், சி. சரவண கார்த்திகேயன், கேபிள் சங்கர்  உள்ளிட்ட  எழுத்தாள ர்களும் வளர்ந்து வரும் எழுத்தாளர்களும் கலந்து கொண்டனர்.எழுத்தாளர்க ளின் சந்தேகங்களுக்கு அமேசான் கிண்டில் நேரடி பதிப்பக நிர்வாகி வைஷாலி அகர்வால் விளக்கமளித்தார்.