சென்னை, டிச. 4 - உயர்கல்வித் துறை சார்பில் சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில் ரூ. 21 கோடியே 60 லட்சம் செல வில் கட்டப்பட்டுள்ள சிறப்பு மாணவர் மற்றும் மாணவியர் விடுதிக் கட்டடங்களை முதல்வர் மு.க ஸ்டாலின் புதன்கிழமை (டிச.4) திறந்து வைத்தார்.
அத்துடன், அங்கு தங்கி யுள்ள சிறப்பு மாணவ - மாணவியரைச் சந்தித்து அவர்களுக்கு தேவையான வசதிகள் செய்து தரப் ழுட்டுள்ளதா என்றும் கூடுத லாக என்ன வசதிகள் தேவை? என்றும் கேட்டறிந்தார். இந்த விடுதிக் கட்டடங் களானது, சிறப்பு மாணவர் மற்றும் சிறப்பு மாணவி யருக்காக கட்டப்பட்டிருழு பது ஆகும். தரை மற்றும் இரண்டு தளங்களுடன் 64,455 சதுர அடி பரப்பள வில் 38 மாணவர் அறைகள் மற்றும் 32 மாணவியர் அறை களுடன், 114 மாணவர் குளும், 96 மாணவியர்களும் தங்கும் வசதியுடன் கட்டப் ழுட்டுள்ளது.
ஒவ்வொரு அறையிலும் சிறப்பு மாணவர்கள் பயன் படுத்தும் வகையில் சிறப்பு வகை அலமாரிகள், அனைத்து அறைகளிலும் ஸ்மார்ட் லாக், பிரத்யேக சாய்தள அமைப்பு, ஒவ்வொரு குளியலறை மற்றும் கழிவறைகளில் அவ சரக் குறியீடு விளக்குகள், கழிவறைகளில் சிறப்பு வைகிராப் பார்கள், நான்கு மின்தூக்கிகள் ஒலி மற்றும் ஒளி அமைப்பான்கள் போன்ற வசதிகள் செய்யப் பட்டுள்ளன.
நிகழ்ச்சியில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் மா. சுப்பிரமணியன், பி.கே. சேகர்பாபு, கோவி. செழி யன், மேயர் ஆர். பிரியா மற்றும் அரசு உயர் அலு வலர்கள் கலந்து கொண்டனர்.