நவ பாசிசத்தை தொழிலாளி வர்க்கம் முறியடிக்கும்
மத்தியக்குழு உறுப்பினர் என்.குணசேகரன் பேச்சு
சென்னை, மே 10 - நவபாசிசத்தை தொழிலாளி வர்க்கம் முறியடிக்கும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் என்.குண சேகரன் கூறினார். இரண்டாம் உலகப்போரில் பாசிச படைகளை சோவியத் செஞ்சேணை வீழ்த்தியதன் 80ஆம் ஆண்டு விழா வெள்ளியன்று (மே 10) உலகம் முழு வதும் கொண்டாடப்பட்டது. இதன் ஒருபகுதியாக தென் சென்னை மாவட்டத்தில் இளம் கம்யூ னிஸ்ட்டுகளிடையே பேசிய என்.குண சேகரன், இரண்டாம் உலகப் போரின் வரலாறு, செஞ்சேனையின் தியாகம், சோவியத்தின் பங்களிப்பு உள்ளிட்ட அம்சங்களை விளக்கினார். தற்கால நிகழ்வுகள் குறித்து அவர் பேசியதன் ஒருபகுதி வருமாறு: தேர்தல் மூலம் ஆட்சிக்கு வந்த ஹிட்லர், சமூகத்தில் நிலவும் பிரச்சனைகளுக்கு முதலாளித்து வம்தான் காரணம் என்பதை மறைத்து யூதர்கள் என பிரச்சாரம் செய்தார். ஆரிய இனமே மேலானது என மேன்மை உணர்வை ஊட்டினார். ஹிட்லரின் கொள்கை, ஜெர்மன் செயல் திட்டங்களை அடிப்படையாக கொண்டு ஆர்எஸ்எஸ் செயல்படுகிறது. புதிய கல்விக் கொள்கை என்ற பெய ரில் இந்துத்துவா சித்தாந்தத்தை புகுத்து கிறது. யூதர்களுக்கு ஜெர்மனியில் குடி யுரிமை மறுக்கப்பட்டது போன்று, பாஜக அரசு சிஏஏ, என்பிஆர், என்ஆர்சி போன்ற சட்டங்களை கொண்டு வந்துள்ளது. ஹிட்லர் ஆட்சிக்கு வந்து, அரசிய லமைப்பு சட்டத்தை தூக்கியெறிந் தார். இந்தியாவில் அவ்வாறு செய்ய முடியாததால், அரசியலமைப்பு சட்ட த்தை நீர்த்துப் போகச் செய்கிறார்கள். இந்துத்துவா இந்தியாவிற்கு ஆபத்தா கவும், அபாயகரமாகவும், அச்சுறுத்த லாகவும் உள்ளது. ஜெர்மனி பிற நாடுகள் மீது போர் தொடுக்க தேசிய வெறியை ஊட்டியது. அதேபோன்று இந்தியாவிலும் இன வெறி, தேசிய வெறி ஊட்டப்படுகிறது. தற்போதுள்ள நிலையில் பாகிஸ்தான் அரசுக்கு இந்தியா கூடுதல் அழுத்தம் தர வேண்டும். பஹல்பூர் தாக்குதலை வைத்து பாஜக அரசியல், தேர்தல் ஆதாயம் தேடும். அதனை முறியடிக்க வேண்டும். சிறுபான்மையினருக்கு எதிராக வெறி ஊட்டுவதாக பாசிசம் உள்ளது. முதலாளித்துவம் பெரும் நெருக்கடிக்கு உள்ளாகும்போது பாசிசம் தலை தூக்குகிறது. “நிதி மூலதனத்தின் அதி காரம்தான் பாசிசம்” என்றார் ஜார்ஜ் டிமிட்ரோவ். முதலாளித்துவத்தின் தோல்வியை மறைக்க, லாபத்தை அதி கரிக்க இனவெறி, மதவெறி தூண்டப் படுகிறது. இந்தியாவில் நிலவும் நவபாசி சத்தை முறியடிக்க உழைக்கும் மக்களை திரட்டுவோம். நவ பாசி சத்தை தொழிலாளி வர்க்கம் போராடி முறியடிக்கும். இவ்வாறு அவர் பேசினார். இந்த நிகழ்வில் மாவட்டச் செய லாளர் ஆர்.வேல்முருகன், மாவட்டக் குழு உறுப்பினர்கள் வெல்கின், தீ.சந்துரு, எஸ்.ஆனந்தகுமார், என்.குமரன் உள்ளிட்டோர் பேசினர்.