tamilnadu

நுகர்வோர் குறைகளை ஒற்றை உறுப்பினர் ஆணையம் விசாரிக்கத் தடை விதிக்கலாமா?ஒன்றிய - மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு

சென்னை, ஆக. 24 - மாநில நுகர்வோர் குறைதீர் ஆணை யத்தில் ஒற்றை உறுப்பினருடன் வழக்கு களை விசாரிக்கத் தடை கோரி தொடரப் பட்ட வழக்கில், ஒன்றிய - மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை கே.கே. நகரைச் சேர்ந்த  விமல் மேனன் என்பவர் உயர் நீதிமன் றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தி ருந்தார்.  அதில், “நுகர்வோர் பாதுகாப்புச் சட்டப் படி, தேசிய, மாநில, மாவட்ட நுகர்வோர் நீதிமன்றங்கள், தலைவர் மற்றும் நீதித் துறை உறுப்பினர், நிபுணத்துவ உறுப்பி னர்களுடன் செயல்பட வேண்டும். ஆனால், தற்காலிக அவசர தேவை களுக்காக ஒற்றை உறுப்பினருடன் செயல்படவும் நுகர்வோர் சட்டப்பிரிவு வழிவகை செய்கிறது.

தமிழ்நாடு மாநில நுகர்வோர் குறை தீர் ஆணையத்தில் தற்போது தலை வராகவும், நீதித்துறை உறுப்பினராகவும் உயர் நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி ஆர். சுப்பையா பதவி வகித்து வருகிறார். இவ்வாறு கடந்த ஓராண்டாக ஒற்றை உறுப்பினருடன் மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையம் செயல்படுவது சட்டவிரோதமானது.  

எனவே ஒற்றை உறுப்பினருடன் ஆணையம் செயல்பட அனுமதிக்கும் சட்ட பிரிவு அரசியல் சாசனத்துக்கு விரோத மானது, என அறிவித்து அதை ரத்து  செய்ய வேண்டும். அதுவரை மாநில குறை தீர் ஆணையத்தில் ஒற்றை உறுப்பின ருடன் வழக்குகளை விசாரிக்கவும், முடி வுகளை எடுக்கவும் தடை விதிக்க வேண்டும்.

ஒற்றை உறுப்பினர் பிறப்பித்த உத்தரவுகளை செல்லாது என அறிவிக்க வேண்டும்” என கோரியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி டி. கிருஷ்ணகுமார் மற்றும் நீதிபதி பி.பி. பாலாஜி ஆகியோர் அடங்கிய அமர்வு, ஒற்றை உறுப்பின ருடன் வழக்குகளை விசாரிக்கத் தடை விதிப்பது குறித்து ஒன்றிய - மாநில அரசுகள் மற்றும் மாநில நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்துள்ளனர்.