சென்னை, டிச. 23 - தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் 28 வகையான சாதிய, மத பாகுபாடுகள் உள்ளது என்று தீண்டாமை ஒழிப்பு முன்னணி நடத்திய கள ஆய்வில் தெரிய வந்துள்ளது.
தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி ‘பள்ளிகளில் நிலவும் சாதி யப் பாகுபாடுகள்’ குறித்து தமிழ் நாட்டின் 36 மாவட்டங்களில் உள்ள 441 பள்ளிகளில் பயிலும் 644 மாண வர்களிடம் கள ஆய்வு நடத்தியது. இந்த ஆய்வு முடிவுகளை வெளி யிட்டு முன்னணியின் பொதுச் செயலா ளர் கே.சாமுவேல் ராஜ் கூறியதாவது:
தமிழ்நாட்டில் வெளிப்பட்ட கல்வி நிலையப் பாகுபாடுகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. பிளேடால் முது கில் கீறியது, சாதிக் கயிறு பிரச்சனை யில் தாக்குதல் மரணம், வீடு புகுந்து தாக்குதல் - தடுத்த சகோதரியும் படு காயம், சண்டையை விலக்கி விட்ட தற்காக நீ எப்படி தலையிடலாம் எனத் தாக்குதல், அம்பேத்கர் படத்தை செல்போன் முகப்பு படமாக வைத்ததற்கு தாக்குதல், கபடி விளை யாடும் போது கால் பட்டு விட்டது என்று தாக்குதல், பிற்படுத் தப்பட்ட சாதியைச் சேர்ந்த பெண்ணு டன் பேசிக் கொண்டு இருந்ததற்கு தாக்குதல் என கொடூரமான நிகழ்வுகள் அரங்கேறின.
மதுரை பாலமேடு மறவப்பட்டி, திருநெல்வேலி பள்ளக்கால், தூத்துக் குடி கழுகுமலை, ராணிப்பேட்டை சோளிங்கர், பண்ருட்டி, புதுக் கோட்டை, திருநெல்வேலி நாங்கு நேரி உள்ளிட்ட நிகழ்வுகள் பள்ளி களின் பாகுபாடுகளின் உச்சத்தை உணர்த்துவதாக அமைந்தன.
சாதிக் கயிறு, திலகம் கூடாது என 2019 இல் அன்றைய அதிமுக அரசு ஒரு சுற்றறிக்கை வெளியிட்டது. பாஜகவின் எதிர்ப்பையடுத்து அரசு பின் வாங்கியது. சுற்றறிக்கை விடுத்த அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை வைத்தது. இந்தப் பின்னணியில், மேனாள் சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் கே.சந்துரு தலைமையில் தமிழ்நாடு அரசு ஒரு நபர் ஆணையத்தை அமைத்து தீர்வுகளுக்கான முறைமை குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க எடுத்திருக்கும் முடிவு வரவேற்கத்தக்கது.
தமிழ்நாட்டில் சாதிய மேலாதிக்கம் கொண்ட இந்துத்துவா ஊடுருவல்கள், சாதிய ஆதிக்க சக்திகளின் செயல்பாடுகள் மாணவர்கள் மத்தியில் நிகழ்ந்து வருவதை ஆய்வின் மூலம் உணர முடிந்தது. கல்வி நிலையங்களில் இருந்து சமூக நீதியும், சமூக நல்லொ ழுக்கமும் பாய்ந்து சென்று சமூகத்தை சீர்திருத்த வேண்டும். மாறாக, சாதிய அழுக்குகள் கல்வி நிலையங் களுக்குள் புகுந்து மாணவர்களை கெடுக்கும் நிலை மாற வேண்டும்.
பதின் பருவத்தில் இயல்பாக ஏற்படும் சீண்டலுக்கு உந்தல் சாதிச் சீண்டல் மடை மாற்றம் ஆகியுள்ளன. தேர்தல்களில் வாக்கு வங்கி அரசியல் சமூகம், குடும்பம் என ஊடுருவி பள்ளி கள் வரை நீள்கின்றன.
நேரடி சாதிய பாகுபாடுகள்
தலித் மாணவர்களை கழிப்பிடங் களை சுத்தம் செய்ய வைப்பது, பொதுத்தேர்வில் முதல் இரண்டு மதிப்பெண்கள் எடுக்கும் மாண வர்கள் தலித்துகளாக இருந்தால் பத்திரிக்கை செய்தி கொடுக்க மறுப்பது; விளம்பரப்படுத்தாதது, உணவு சமைப்பதில் பட்டியல் இனத்த வரை அனுமதிக்க மறுப்பது, சத்துணவு வழங்க சாதி வாரியாக தனி வரிசை வைத்திருப்பது, உணவு உண்ண தனித்தனி அறை வைத்திருப் பது, சுவர்களில் சாதியின் பெயர்களை எழுதி இருப்பது,
ஆசிரியர்களுக்குள் சாதியப் பாகுபாடு, தலித் மாணவர்களை ஆசிரியர் தொட்டு பேச மறுப்பது, தவறு செய்யும் தலித் மாணவர்க ளுக்கு கூடுதல் தண்டனை கொடுப்பது, தண்ணீர் குடிப்பதற்கு டம்ளர் வைக்காதது, ஆசிரியரே மாணவர் களை சாதிய ரீதியாக பாகுபடுத்து வது, சாதிய ரீதியாக கிண்டல் செய்வது, பேருந்தில் பாகுபாடு, தலித் மாணவர்களை கடைசி வரிசையில் உட்கார வைப்பது, மத ரீதியான பாகு பாடு என பள்ளிகளில் 28 வகையான நேரடி சாதிய பாகுபாடுகள் நிலவு கின்றன.
சாதிய அடையாளங்களை வெளிப்படுத்துதல்
சாதிக்கென்று நிறத்தை கட்டமைத்து கயிறு, பொட்டு, டாலர், செயின், கடுக்கன், தொப்பி என அடையாளங்களுடன் பள்ளிகளுக்கு வருவது, சாதி அடையாளத்துடன் தலைவர்கள் படத்தை பஸ் பாசுக் குள் வைத்திருப்பது, சாதிய அடை யாளத்துடன் டீ சர்ட்டுகள், பனியன் கள் அணிந்திருப்பது, பள்ளிகளில் சாதிப் பெருமை பேசுவது, உள்ளூர் சாதி பிரமுகர்கள் சாதி பெருமை பேசு வது, மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தருவது என 11 வகைகளில் சாதிய பெருமைகளை மாணவர்கள் வெளிப்படுத்துகின்றனர்.
அரசு தலையீடு...
பள்ளிகளில் அடிப்படை கட்ட மைப்பு தேவைகள், நூலகம், நூல கத்தில் புத்தகங்கள், கழிப்பிடம், குடி நீர், இதர தேவைகளுக்காக தண்ணீர், ஆய்வுக் கூடம், துப்புரவு பணியாளர் நியமனம் ஆகிய தேவைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும். இதில் உள்ள குறைபாடுகள் சாதியப் பாகுபாடு களை அதிகரிக்கவும், உருவாக்கவும் காரணமாகிவிடுகின்றன.
பாராட்டுக்குரிய முன்னெடுப்புகள்
ஆசிரியர்களின் முன்னெடுப்பால் சில இடங்களில் மாணவர்களிடம் சாதி அடையாளம் அணிகிற வழக்கம் கைவிடப்பட்டுள்ளது. சாதி ரீதியாக இழிவாகப் பேசிய மாணவர்களை கண்டித்த ஆசிரியருக்கு எதிராக கரும்பலகையில் வசைபாடி எழுதி வைத்திருந்தது, தலைமை ஆசிரியர் தலையிட்டு சாதிய ரீதியான பிரச்சனைக்கு தீர்வு கண்டது என நல்ல அம்சங்கள் ஆய்வில் வெளிப்ப பட்டது. அவை நம்பிக்கை அளிப்ப தாக உள்ளது.
ஆலோசனைகள்
‘சமத்துவப் பள்ளிக்கான’ விரி வான வழிகாட்டி ஆவணத்தை அரசு வெளியிடலாம். இந்திய ஆட்சிப்பணி அதிகாரி பொறுப்பில், பள்ளிக் கல்வித்துறையின் கீழ் சமூக நீதிக் கென்று ஒரு தனிக் கட்டமைப்பை தலை மைச் செயலகம் முதல் மாவட்டங்கள் வரை ஏற்படுத்த வேண்டும். சாதிப் பாகுபாடு குறித்து இலக்கணம் வரையறுக்கப்பட்டு அது குறித்த விழிப்புணர்வு மாணவர் - ஆசிரியர் - அலுவலக ஊழியர் பெற்றோர் மத்தியில் உருவாக்க வேண்டும்.
ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் உளவியல் சார்ந்த வகுப்புகளை எடுக்க வேண்டும். அத்தோடு பாலின சமத்துவம் குறித்த உரையாடல் நடத்த வேண்டும். ஒவ்வொரு பள்ளியிலும் நடைமுறையில் இருக்கும் ‘மாணவர் மனசு’ என்கிற (புகார் பெட்டி) ஏற்பாட்டை திறன்மிக்க முறையில் நடைமுறைப்படுத்த வேண்டும். சாதிச் சான்றிதழ் குறித்த அனைத்து விவரங்களையும் கல்வி நிலைய அலுவலகத்தில் மட்டும் வைக்க வேண்டும்.
மாணவர்களின் வருகைப் பதி வேட்டில் சாதி குறித்து அடை யாளங்கள் முழுக்க நீக்க வேண்டும். மாணவர்களை தனித்தனியாக நிற்கவைத்து விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்யும் நடைமுறையை முற்றிலும் நிராகரிக்க வேண்டும். பள்ளிகளில் சாதிய ரீதியாக ஊர் விழாக்களுக்கு முக்கியத்துவம் அளிப்பது நிறுத்தப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட சுமார் 25 பரிந் துரைகள் அரசுக்கு கொடுக்க உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த சந்திப்பின்போது முன்னணி யின் தலைவர் த.செல்லக்கண்ணு, துணைப் பொதுச் செயலாளர்கள் பி.சுகந்தி, கே.சுவாமிநாதன், செயலா ளர் வேணி, இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலத் தலைவர் கோ.அரவிந்த்சாமி ஆகியோர் உடனிருந்தனர்.