tamilnadu

img

கருத்தரங்கம்...

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் பிப்.18 அன்று சென்னையில் ‘வேலையின்மைக்கு எதிராக’ பேரணி நடைபெற உள்ளது. இதனையொட்டி சங்கத்தின் மத்திய சென்னை மாவட்டம் சார்பில் ஞாயிறன்று (பிப்.9) “சென்னை தொழில் வளர்ச்சியும், அதிகரிக்கும் வேலையின்மையும்”எனும் தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் கே.மணிகண்டன் தலைமையில் நடைபெற்ற இந்த கருத்தரங்கில் பிரச்சாரத்திற்கான துண்டு பிரசுரத்தை வெளியிட்டு தென்மண்டல பொதுக்காப்பீட்டு ஊழியர் சங்க பொதுச் செயலாளர் ஜி.ஆனந்தன் பேசினார். மாநிலச் செயலாளர் எஸ்.பாலா, மாவட்டச் செயலாளர் எஸ்.மஞ்சுளா, பொருளாளர் சித்தார்த்தன், நிர்வாகிகள் ஜெ.பார்த்திபன், ஆ.பிரியதர்ஷினி உள்ளிட்டோர் பேசினர்.