tamilnadu

img

தொழிற்சங்கம் ஆரம்பித்ததால் சாம்சங் துணை நிறுவனம் பழிவாங்கல்

சென்னை, ஆக. 22 - காஞ்சிபுரம் சாம்சங் நிறுவனத்திற்கு உதிரிபாகம் தயாரிக்கும் எஸ்எச் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் தொழி லாளர்கள் 2024 ஜூன் மாதம் சிஐடியு தொழிற்சங்கத்தை அமைத்ததற்காக, சங்கத்தின் 12 நிர்வாகிகளை எந்த  குற்றச்சாட்டும் இல்லாமல் உடனடி யாக நிறுவனம் பணியிடை நீக்கம் செய்தது.

இதை எதிர்த்து, கடந்த 62  நாட்களாக தொழிலாளர்கள் அனை வரும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதுநாள் வரை சுமூகத் தீர்வு காண நிர்வாகம் முன்வரவில்லை.

இந்நிலையில், 12 நிர்வாகிகள் உட்பட அனைவருக்கும் வேலை வழங்கக் கோரியும் பழிவாங்கல் நடவடிக்கையைத் திரும்பப் பெற வலியுறுத்தியும் நடைபெற்று வரும்  இந்த போராட்டத்திற்கு சுமூக தீர்வு  காண்பதற்கு மாறாக, வெளி நிறு வனத்தின் ஒப்பந்தத் தொழிலாளிகளை வைத்து நிர்வாகம் உற்பத்தியை மேற்கொள்ள நிர்வாகம் முயற்சித்தது.

இந்த சட்டவிரோத உற்பத்தியை எதிர்த்து கடந்த இரண்டு நாட்களாக ஆலை முன்பு தொழிலாளர்களும் அவர்களின் குடும்பங்களைச் சேர்ந்தவர்களும் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இந்தப் போராட்டத்தை ஒடுக்கும் வகை யில், புதனன்று (ஆக.21) காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை- போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களையும் தொழிற்சாலை அமைந்துள்ள ஆரிய பெரும்பாக்கம் கிராமத்தின் பஞ்சாயத்துத் தலைவர் வி. சுமதி  உட்பட 200-க்கும் மேற்பட்டவர் களையும் கைது செய்யப்பட்டுள்ளது.

எனவே, கைது செய்யப்பட்டுள்ள அனைவரையும் விடுதலை செய்வது டன், சட்டவிரோத உற்பத்தியை தடை செய்யவும் நிரந்தர தொழிலாளர் களுக்கு மீண்டும் வேலை வழங்கவும் தமிழ்நாடு அரசு தலை யிட்டு தீர்வுகாண வேண்டுமென சிஐடியு  மாநிலத் தலைவர் அ. சவுந்தர ராசன், பொதுச்செயலாளர் ஜி. சுகு மாறன் ஆகியோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.