சென்னை, மே 21- தமிழ்நாட்டில் 39 மக்களவைத் தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் 19 அன்று ஒரே கட்டமாக தேர்தல் நடை பெற்றது.
முன்னதாக, ஏப்ரல் 6 அன்று தேர்தல் பறக்கும் படையினர், தாம்பரம் ரயில் நிலையத்தில் சோத னையில் ஈடுபட்டிருந்த போது, சென்னையில் இருந்து நெல்லை புறப்பட்டுச் சென்ற விரைவு ரயிலில், ரூ. 4 கோடி பணம் பிடிபட்டது. விசார ணையில் உரிய ஆவணங்கள் இல்லாமல் இந்த பணம் கொண்டு செல்லப்பட்டது தெரிய வரவே, 4 கோடி ரூபாய் பணத்தை பறிமுதல் செய்த பறக்கும் படையினர், இது தொடர்பாக 3 பேரை கைதும் செய்தனர்.
விசாரணையில், அவர்கள் சதீஷ், நவீன், பெருமாள் என்ப தும், தமிழ்நாடு பாஜக துணைத் தலைவரும், பாஜக சட்டமன்றக் கட்சித் தலைவரும், நெல்லை மக்க ளவைத் தொகுதி பாஜக வேட்பாள ருமான நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான சென்னை புரசை வாக்கத்தில் உள்ள ஹோட்டல் ஊழியர்கள் என்பது தெரியவந்தது.
தேர்தல் செலவுக்காக, நயி னார் நாகேந்திரன் உத்தரவின் பேரி லேயே இவர்கள் ரூ. 4 கோடி பணத்தை, எடுத்துச் சென்றதாகவும் வாக்குமூலம் அளித்தனர்.
இதனிடையே, இந்த சம்பவம் தொடர்பான வழக்கு சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டது. அவர்கள் நயி னார் நாகேந்திரன் உட்பட பலர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் வழக்கு தொடர்பாக நேரில் ஆஜ ராகும்படி நயினார் நாகேந்திரனுக்கு ஏற்கெனவே சம்மன் அனுப்பினர். ஆனால் அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை.
கேசவ விநாயகம் - எஸ்.ஆர். சேகர்
அதேபோல, இந்த வழக்கில் தமிழக பாஜகவின் முக்கிய நிர்வாகி கள், மாநில அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகம், பாஜக மாநிலப் பொருளாளர் எஸ்.ஆர். சேகர் மற்றும் முரளி ஆகியோருக்கும் மே 21 அன்று காலை 10 மணிக்கு நேரில் ஆஜராகுமாறு சிபிசிஐடி சார் பில் சம்மன் அனுப்பிவைக்கப்பட்டது.
எனினும், நயினார் நாகேந்திரன், கேசவ விநாயகம், எஸ்.ஆர். சேகர் ஆகிய மூவருமே எழும்பூர் சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜராகவில்லை. இதனால் இறுதி கட்ட விசாரணை பாதிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, சிபிசிஐடி போலீ சார் கோவையில் உள்ள எஸ்.ஆர்.சேகர் வீட்டுக்கு சென்றனர். அங்கு சிபிசிஐடி டிஎஸ்பி சசிதரன் தலைமையிலான அதிகாரிகள் குழு எஸ்.ஆர்.சேகரிடம் விசாரணை நடத்தியது.அதேவேளை, விசாரணைக்கு ஆஜராக கால அவகாசம் தரும்படி கேசவ விநாயகம், எஸ்.ஆர்.சேகர், முரளி ஆகிய மூன்று பேரும்வழக்கறிஞர்கள் மூலம் கடிதம் கொடுத்துள்ளனர். அந்த கடிதத்தில்,
மக்களவைத் தேர்தல் பிரச்சா ரத்திற்காக வெளிமாநிலங்களுக்கு சென்று வருவதால் விசாரணைக்கு மற்றொரு நாள் நேரில் ஆஜராவதாக தெரிவித்துள்ளனர்.
அதேவேளை, விசாரணைக்கு ஆஜராக கால அவகாசம் தரும்படி கேசவ விநாயகம், எஸ்.ஆர். சேகர், முரளி ஆகிய மூன்று பேரும் வழக்கறிஞர்கள் மூலம் கடிதம் கொடுத்துள்ளனர். அந்த கடிதத்தில், மக்களவைத் தேர்தல் பிரச்சா ரத்திற்காக வெளிமாநிலங்களுக்கு சென்று வருவதால் விசாரணைக்கு மற்றொரு நாள் நேரில் ஆஜராவதாக தெரிவித்துள்ளனர்.
4 கோடி ரூபாய் பறிமுதல் செய்ய ப்பட்டு 50 நாட்களை நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில் மேற்கண்ட மூன்று பேரும் அளிக்கும் பதிலை தொடர்ந்து பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு மீண்டும் சம்மன் அனுப்பி விசாரணை நடத்த முடியும். ஆனால், பாஜக தலைவர்கள் சிபிசிஐடி போலீசார் விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுக்காமல் டிமிக்கி கொடுத்து வருவதால் பெரிய அளவில் சந்தேகம் எழுந்துள்ளது.