tamilnadu

img

முதலீட்டை விட அதிக லாபம் ஈட்டின

பி.வில்சன் எம்.பி., குற்றச்சாட்டு

சென்னை,நவ.3- தமிழ்நாட்டில் சுங்கச்சாவடிகளில் நியாயமற்ற கட்டணத்தை செலுத்த மக்கள் நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள்.அனைத்து சுங்கச்சாவடிகளையும் அகற்ற ஒன்றிணைவோம் என்று  திமுக மாநிலங்களவை உறுப்பினர் பி.வில்சன் அழைப்பு விடுத்துள்ளார்.

இது குறித்து, அவர் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு: “அக்டோபர் 2024 நிலவரப்படி, தமிழ்நாட்டில் தற்போது 64 சுங்க கட்டண சாவடிகள் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கீழ் செயல்பட்டு வருகின்றன.

நாடாளுமன்றத்தில் நான் எழுப்பிய கேள்விகளுக்கு பதில ளிக்கும் போது அமைச்சருக்கு, அதி காரிகளால் போதிய ஆலோச னைகள் வழங்கப்படவில்லை என்பது ஆச்சரியமளிக்கிறது.

அமைச்சரின் எழுத்துப்பூர்வ பதிலில், 1997 ஆம் ஆண்டின் முந்தைய தேசிய நெடுஞ்சாலை கட்டண விதிகளில் அறுபது கிலோ மீட்டர் தூரம் குறித்து எந்த அளவு கோலும் இல்லை என்று கூறப் பட்டுள்ளது. இது 1997 விதி களைப் பற்றிய தவறான புரிதலைக் குறிக்கிறது. இந்த விதியானது உண்மையில் இரண்டு சுங்கச் சாவடிகளுக்கு இடையில் 80 கி.மீ தூரத்தை குறிப்பிடுகிறது.

சென்னையில் உள்ள பரனூர் சுங்கச் சாவடியில் சாலை பயனர் களுக்கு 2008 கட்டண விதிகளின் விதி  6 இல் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ள பலன்களை மறுப்பது அநீதியானது. இது சுங்க கட்டணங்களில் 60 சதவீதம் குறைக்க அனுமதிக்கிறது, இத னால் 40 சதவீதம் குறைக்கப்பட்ட விகி தத்தில் கட்டணம் வசூலிக்க உதவு கிறது.

ரூ.28.54 கோடி கூடுதல்  இலாபம் ஈட்டிய சுங்கச்சாவடி

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையமானது பரனூரில் செய்த முதலீட்டை விட ரூ.28.54 கோடி கூடுதல் இலாபம் ஈட்டியுள்ளது என்பதையும், விதிகளின்படி சுங்கக்  கட்டணத்தைக் குறைக்கத் தவறி விட்டது என்பதையும் அமைச்சர் ஒப்புக்கொள்கிறார்.

அதுமட்டுமின்றி, வசூல் செய்யப்பட்ட அதிகப்படியான நிதி யானது இந்தியாவின் ஒருங்கி ணைந்த நிதியில் டெபாசிட் செய்யப் படுகிறது என்பதும், அது தேசிய நெடுஞ்சாலைகளை மேலும் மேம் படுத்துவதற்கும் விரிவாக்கு வதற்கும் ஒதுக்கப்படுகிறது என்ற விளக்கமும் மிகவும் கேள்விக்குரியது.

இந்த நடைமுறையானது சுங்கச்சாவடி கட்டணம் குறித்து நிறு வப்பட்ட சட்டங்களை மீறுவதாக வும், பொது நிதியை தவறாகப் பயன்படுத்துவதாகவும், சாலை பயனர்களின் செலவில் ஒரு சில ருக்கு பயனளிப்பதாகவும் தெரி கிறது. மேலும், இந்த முதலீடுகள், செலவுகள் மற்றும் வசூல்களை மறுஆய்வு செய்ய தணிக்கை ஆணையம் என்று எதுவும் இல்லை.

கட்டண விதிகள் பெரும்பாலும் நெகிழ்வான விதிமுறைகளுடன் ஒப்பந்தக்காரர்களுக்கு சாதகமாக உள்ளன என்பது அனைவரும் அறிந்ததே. அதே நேரத்தில் பொது  மக்கள் அத்தகைய அநீதியான சட்டத்தின் கீழ் நியாயமற்ற தொகை யை செலுத்த நிர்ப்பந்திக்கப்படு கிறார்கள். 

இந்த நியாயமற்ற சுங்கச்சாவடி கட்டணங்களை எதிர்க்கவும், நாடு முழுவதும் சுங்கச்சாவடிகளை அகற்றவும் நாம் அனைவரும் ஒன்றுபட வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.