tamilnadu

ஒரே நேரத்தில் ஒருவருக்கு 11 கல்லூரிகளில் பணிநியமனம்; தனியார் பொறியியல் கல்லூரிகளுக்கு அங்கீகாரம் வழங்கியதில் மிகப்பெரும் முறைகேடு

சென்னை, ஜூலை 31- அண்ணா பல்கலைக்கழகம் நூற்றுக் கணக்கான  தனியார் பொறியியல் கல்லூரி களுக்கு  வழங்கிய அங்கீகாரத்தில்  மிகப் பெரும் மோசடி நடைபெற்றுள்ளது. ஆசியாவில் புகழ்பெற்ற பொறியியல் பல்கலைக்கழகங்களில் ஒன்றான அண்ணா  பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்கள் நியமனத்தில் இருநூற்றுக்கும் மேற்பட்ட கல்லூரிகள் போலியாக பேராசிரியர்களை நிரம்பியுள்ளன. அதனை முறையாக ஆய்வு செய்யாத அண்ணா பல்கலைக் கழகம் அக்கல்லூரிகளுக்கு அங்கீகாரம் வழங்கியுள்ளது.

 2023-24 கல்வியாண்டில் அண்ணா பல்கலைக்கழகத்தின் இணைப்பு கல்லூரி களின் ஆய்வுக்குழு 480 பொறியியல் கல்லூ ரிகளுக்கு அங்கீகாரம் வழங்கியுள்ளது, கல்லூரிகளில் பணியாற்றக்கூடிய 353 பேராசிரியர்கள் ஒரே நேரத்தில் ஒருவரே ஐந்து முதல் 10 கல்லூரிகள் வரை முழுநேர பேராசிரியர்களாக பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். அதாவது 353  பேராசிரியர்கள் 972 இடங்களில் பணியாற்றிக் கொண்டிருப்பதாக அண்ணா பல்கலைக்கழகத்தின் சிஏஐ(CAI) அறிக்கையில் உள்ளது.

இந்திய தொழில்நுட்ப கல்விக்குழு, ஒரு பொறியியல் கல்லூரி அங்கீகாரம் பெற வகுத்துள்ள விதிமுறைகளையும் கல்லூரி யின் ஆய்வுக் கூடங்களுக்கான முறையான செயல்பாடுகள் குறித்தும் ஆய்வு செய்ய வேண்டும். ஆனால் முறையான  எந்தவித ஆய்வுகளுமின்றி பல தகுதி யற்ற கல்லூரிகளுக்கு அங்கீகாரம் வழங்கி யுள்ளது 2023-24 தகுதிக்குழு. அதே போல இந்திய தொழில்நுட்ப கல்விக்குழு வழங்கி யுள்ள பேராசிரியா்கள் நியமன விதி முறைகளின்படி ஒரு பேராசிரியர் ஒரு  கல்லூரியில் மட்டுமே  முழுநேர பேராசிரிய ராக பணிபுரிய முடியும். அந்த விதி முறைகளை முழுமையாக மாற்றியுள்ளது அண்ணா பல்கலைக்கழகம். 

இந்திய தொழில்நுட்ப கல்விக்குழு (AICTE)  பேராசிரியர்களுக்கு வழங்கியுள்ள பேராசிரியர்கள் உள்நுழைவு எண்ணில் மொத்தமுள்ள 45,000 பேராசிரியர்களில் சுமார் 13,891 போலியான தனித்துவ அடையாள அட்டை(Unique ID) கள் உள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்ட 480 பொறியியல் கல்லூரிகளில் 224 கல்லூரிகள் போலியாக பேராசிரியர்களை நியமனம் செய்துள்ளன.

இத்தகைய மாபெரும் மோசடியால் தமிழ்நாடு முழுவதுமுள்ள பொறி யியல் கல்லூரி மாணவர்களின் கல்வியும் அவர்களின் எதிர்காலமும் அபாயத்திற்கு உள்ளாகியுள்ளது. 

எனவே தமிழ்நாடு அரசும் உயர்கல்வித் துறையும் உடனடியாக தலையிட்டு அண்ணா பல்கலைக்கழகத்தின் 2023-24ஆம் கல்வியாண்டின்(Affiliation - பிரிவு) ஆய்வுக்குழுவில் ஆய்வுகளை மேற்கொண்ட (CAI) இயக்குநர் ஏ. இளைய பெருமாள், துணைவேந்தர் வேல்ராஜ் மற்றும் சிஏஐ (Center for Affiliation of Institute) குழுவில் அங்கம் வகித்த உறுப்பினர்கள் இந்த மோசடியில் ஈடுபட்டுள்ள அனைத்து கல்லூரிகளின் நிர்வாகத்தின் மீது விசாரணைக் குழு அமைத்து உரிய நடவடிக்கையை மேற் கொள்ள வேண்டும். மேலும் ஒன்றுக்கு மேற்பட்ட கல்லூரிகளில் முழுநேர பேராசிரி யராக பணி நியமனம் பெற்ற அனைத்து பேராசிரியர்கள் மீதும் துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

போலியாக உள்ள 13,891 பேர் யார் என  கண்டறிந்து அவர்கள் மீது உரிய நட வடிக்கை மேற்கொள்ள வேண்டும்; மாண வர்கள் நலன் கருதி அண்ணா பல்கலைக் கழகத்தை பாதுகாத்திட வேண்டும்.

இந்திய மாணவர் சங்க மாநிலத் தலைவர் தௌ.சம்சீர் அகமது,  மாநிலச் செயலாளர் கோ.அரவிந்தசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இருந்து...