கிருஷ்ணகிரியில் போலி என்சிசி முகாம் நடந்த விவகாரத்தில் பள்ளியை நிர்வகிக்கச் சிறப்பு அதிகாரியை நியமிக்கத் தனியார் பள்ளிகள் இயக்குநருக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட கல்வி அதிகாரி சென்னை உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.
போலி என்சிசி முகாம் நடத்தி பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் நாம் தமிழர் கட்சி நிர்வாகி சிவாராமன் என்பவர் கைது செய்யப்பட்டார். இவர் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்ட நிலையில் இந்த வழக்கில் மேலும் பள்ளி நிர்வாகி உட்பட இன்னும் சிலர் கைது செய்யப்பட்டனர்
சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது அதில் பள்ளியை நிர்வகிக்கச் சிறப்பு அதிகாரியை நியமிக்க தனியார் பள்ளிகள் இயக்குநருக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட கல்வி அதிகாரி அறிக்கை தாக்கல் செய்தார். தற்போது செப்டம்பர் 13 ஆம் தேதிக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.