ஆழ்வார்பேட்டையில் கிளர்ச்சி பிரச்சாரம்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மயிலாப்பூர் பகுதி ஆழ்வார்பேட்டையில் நடைபெற்ற கிளர்ச்சி பிரச்சாரத்தை மாநிலக்குழு உறுப்பினர் கே.வனஜகுமாரி தொடங்கி வைத்தார். தென்சென்னை மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எஸ். குமார், பகுதி செயலாளர் ஐ.ஆர். ரவி, மாவட்டக்குழு உறுப்பினர் எம்.சரஸ்வதி எம்.சி., பகுதிக்குழு உறுப்பினர்கள் பாலகிருஷ்ணன், ரமேஷ், இமானுவேல், கிளை செயலாளர் விஜயலட்சுமி, மாரிமுத்து உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.