ராமர் பாத கலக முயற்சி:
உயர்நீதிமன்றம் அனுமதி மறுப்பு!
சென்னை, ஆக.10- அயோத்தியில் ராமர் கோயில் கட்டப் பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இதை கொண்டாடும் வகையில், திருப்பூர் அனுப்பர் பாளையத்தில் உள்ள கருப்பராயன் திருக்கோவிலில், ராமர் பாதங்களை வைத்து பூஜை செய்யும் நிகழ்ச்சி க்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்ததா கவும் அந்த பாதங்களை இராமேஸ்வரம் வரை வாகனத்தில் ஊர்வலமாக எடுத்துச் சென்று அங்கு பூஜை செய்த பின்பு, ரயில் மூலம் அயோத்திக்கு எடுத்துச் செல்ல திட்டமிட்டு இருந்த நிலையில், இதற்கு காவல்துறை அனுமதி மறுத்துள் ளது என்று திருப்பூர் மாவட்ட அகில பாரத இந்து மகா சபா தலைவர் பால கிருஷ்ணன் சென்னை உயர்நீதி மன்றத்தில் தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி ஜி. ஜெயச் சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை சார்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் உதய குமார், “மனுதாரர் ஏற்கெனவே இந்து முன்னணி அமைப்பில் இருந்து நீக்கப் பட்டவர்” என சுட்டிக்காட்டினார். மேலும் “அரசியல் உள்நோக்கத்துடன் இது போன்ற நிகழ்வுகளை ஏற்பாடு செய்துள் ளார்; எனவே, இதற்குஅனுமதி மறுக்கப் பட்டுள்ளது” என்றும் தெரிவித்தார்.
இதையடுத்து, வழக்கை விசாரித்த நீதிபதி, “தொடக்க நிகழ்வு மற்றும் வாகன ஊர்வலத்திற்கு அனுமதி வழங்க உத்தர விட முடியாது” என்று மறுத்து விட்டதுடன், மனுதாரர் தனிப்பட்ட முறையில் கோவி லுக்கு செல்வது, தரிசனம் செய்வதை யாரும் தடை செய்ய முடியாது என்று உத்தரவிட்டார்.
3 நாட்கள் தாம்பரத்தில் விரைவு ரயில்கள் நிற்காது
தெற்கு ரயில்வே அறிவிப்பு
சென்னை, ஆக. 10- சென்னை தாம்பரம் ரயில் நிலை யத்தில் விரைவு ரயில் வழித்தடத்தில் கடந்த ஆகஸ்ட் 23 முதல் தண்டவாள பராமரிப்பு பணிகள் நடந்து வருகின்றன. மேலும் அங்கு மேம்பாட்டு பணிகள் மற்றும் நடைமேடைகள் விரிவாக்க பணிகள் நடந்து வருகிறது.
இதன் கார ணமாக விரைவு ரயில்கள் மற்றும் மின்சார ரயில் சேவையில் ஆகஸ்ட் 14 வரை மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்தப் பணிகள் மேலும் 3 நாட்க ளுக்கு நடைபெற இருப்பதால் ஆகஸ்ட் 15 முதல் 17 வரை 3 நாட்கள் விரைவு ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தாம்பரத்தில் நடந்து வரும் யார்டு புனரமைப்பு பணிகள் காரணமாக வருகிற 15, 16, 17 ஆம் தேதிகளில் சென்னை எழும்பூ ரில் இருந்து புறப்படும் அனைத்து விரைவு ரயில்கள் தாம்பரத்தில் நிற்காது.
இதற்கு மாற்றாக விரைவு ரயில்கள் அனைத்தும் மாம்பலம் ரயில் நிலையத்தில் நின்று செல்லும். அதேபோல் தென் மாவட்டங்களில் இருந்து தாம்பரம் வழியாக எழும்பூர் நோக்கி வரும் அனைத்து விரைவு ரயில்களும் தாம்பரத்தில் நிற்காது. அதற்கு பதிலாக மாம்பலம் ரயில் நிலையத்தில் நின்று செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் பயணிகள் தேவையை கருத்தில் கொண்டு திருச்சி-தாம்பரம் இடையே முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. திருச்சியிலிருந்து ஞாயிற்றுக்கிழமை ஆக. 11 இரவு 10.30 மணிக்கு புறப்படும் முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில் மறுநாள் காலை 5.50 மணிக்கு தாம்பரம் வந்தடையும். இந்த ரயில் தஞ்சாவூர், சிதம்பரம் வழியாக இயக்கப்பட உள்ளது என்று தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.