இரண்டு நாட்களாக பெய்து வரும் பலத்த மழை காரணமாக அம்பத்தூர் அடுத்த திருமுல்லைவாயில் சோழம்பேடு புதிய தெருவில் மழை நீரும், கழிவு நீரும் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த பகுதி பொதுமக்களும், பள்ளிக்கு செல்லும் மாணவர்களும் கடும் அவதிப்படுகின்றனர். சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பார்களா?