ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் குறைந்தபட்ச நிவாரணமே
அளிக்கும் ஆர்.இளங்கோவன் பேச்சு
புதுச்சேரி, ஜூன் 25- ஒருங்கிணைந்த ஓய்வூதியம் திட்டம் ஓய்வூதியர்களுக்கு குறைந்தபட்சம் நிவாரணம் அளிக்கும் திட்டமாகவே உள்ளது என்று மூத்த தொழிற்சங்கத் தலைவர் ஆர்.இளங்கோவன் தெரி வித்தார். புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு ஏப்ரல் 1, 2025 முதல் ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தும் வகையில் ஆணை வெளியிட்டுள்ளது. ஜூன் 30 க்குள் ஊழியர்கள் புதிய ஓய்வூதிய திட்டம் அல்லது ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் ஆகிய ஏதேனும் ஒரு திட்டத்திற்கு ஒப்புதல் வழங்க வேண்டும் என்று அரசு அறி வுறுத்தியுள்ளது. ஊழியர்களுக்கான சந்தேகங்களை போக்கும் வகையில் எந்த திட்டம் பயனளிக்கும் என்பதை விளக்கும் வகையில் அரசு ஊழியர் சம்மேளனத்தில் சிறப்பு கருத்தரங்கம் நடை பெற்றது. இந்தக் கருத்த ரங்கத்திற்கு அரசு ஊழியர் சங்கங்களின் சம்மேளன சிறப்பு தலைவர் ராதா கிருஷ்ணன் தலைமை தாங்கினார். தேசிய ஓய்வூதியர் சங்கங்களின் ஒருங்கி ணைப்புக்குழுவின் தமிழ்நாடு கிளையின் துணைத் தலைவர் ஆர்.இளங்கோவன் பங்கேற்று பேசுகையில், “ஊழி யர்களுக்கான பென்சன் திட்டம் என்றால் அது பழைய ஓய்வூதிய திட்டம் மட்டுமே. இருந்தாலும் ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தில் குறைந்த ஓய்வூதியமாவது கிடைக்கும் என்ற நிலை உள்ளது. எனவே ஒருங்கி ணைந்த ஓய்வூதியத் திட்டம் ஓரளவுக்கு ஓய்வூதியர்க ளுக்கு பயனளிக்கும்” என்றார். கருத்தரங்கத்தில் சம்மேளன கௌரவத் தலைவர் பிரேமதாசன், பொதுச்செயலாளர் முனு சாமி மற்றும் என்பிஎஸ் ஓய்வூதிய திட்டத்தில் பணி புரியும் ஊழியர்கள், ஓய்வூதியர்கள் கலந்து கொண்டனர்.