tamilnadu

img

ஓ.பி.எஸ். குறித்து பதிலளிக்க முடியாது

“ஓ. பன்னீர்செல்வம் குறித்த கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாது; அவர் அதிமுகவிலிருந்து விலக்கப்பட்டு விட்டார். கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்கள் ஜெயலலிதா காலத்தில்கூட மீண்டும் கட்சியில் சேர்க்கப்பட்டு இருக்கிறார்கள் தான். ஆனால், ஜெயலலிதா காலத்தில் கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்கள் கட்சி அலுவலகத்தை உடைக்கவில்லை, கட்சி வாகனத்தை நொறுக்கவில்லை, கட்சிப் பொருளை திருடவில்லை. ஆனால் இப்போது நடந்திருப்பது வேறு” என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.