tamilnadu

மாற்றுத்திறனாளிகள் பயண சலுகை அட்டையை ஆன்லைனில் பெறலாம் : ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு

சென்னை, நவ.26- மாற்றுத்திறனாளிகள் பயண சலுகை அட்டையை ஆன்லைனில் பெறலாம் என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:   நாடு முழுவதும் ரயில்களில் பயணிக்கும் மாற்றுத்திறனாளி களுக்கு 25 சதவீதம் முதல் 50 சதவீதம் வரை கட்டண சலுகை அளிக்கப்படு கிறது.

இந்த கட்டண சலுகையைப் பெறுவதற்கு ரயில்வே நிர்வாகத்திடம் இருந்து சலுகை கட்டணத்திற்கான அடையாள அட்டையை பெற்றிருக்க வேண்டும். தற்போது மாற்றுத்திறனாளிகளுக்கான கட்டண சலுகை அடையாள அட்டையை ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து பெற்றுக்கொள்ள ரயில்வே நிர்வாகம் வழிவகை செய்துள்ளது. இந்த நடைமுறை தெற்கு ரயில்வேயில் சென்னை, திருச்சி, சேலம், மதுரை, பாலக்காடு, திருவனந்தபுரம் என 6 கோட்டங்களிலும் கொண்டுவரப் பட்டுள்ளது. இதன்மூலம் மாற்றுத்திற னாளிகள் சலுகை அடையாள அட்டை யை பெறவும், புதுப்பிக்கவும் ரயில்வே அலுவலகங்களுக்குச்செல்ல தேவையில்லை. ஆன்லைனில் விண்ணப்பித்து பெற்றுக்கொள்ள லாம்.

இதற்காக https://divyang janid.indianrail. gov.in/ என்ற இணையதளத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மாற்றுத்திறனாளி பயணிகள், தங்களின் சலுகை அடையாள அட்டை யைப் பெற அல்லது புதுப்பிக்க, தேவையான ஆவணங்களின் ஸ்கேன் செய்யப்பட்ட நகல்களுடன் தங்கள் விண்ணப்பங்களை ஆன்லைனில் சமர்ப்பிக்க வேண்டும்.

இதற்கு தகுதி யுடைய நபர்களாக பார்வை குறைபாடு உள்ள நபர்கள், பார்வை முழுமையாக இல்லாதவர்கள், மனநலம் குன்றிய வர்கள், செவித்திறன் மற்றும் பேச்சு குறைபாடுள்ள நபர்கள், எலும்பியல் ஊனமுற்றோர், முடக்குவாத நபர்கள் ஆகிய மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம். இந்த சலுகை அடையாள அட்டை யை பெறும் மாற்றுத்திறனாளிகள், சலுகையுடன் முன்பதிவு செய்யப் பட்ட டிக்கெட்டுகளை டிக்கெட் கவுண் டர்கள் அல்லது ஐ.ஆர்.சி.டி.சி. இணை யதளம் வழியாக பதிவு செய்து  கொள்ளலாம். மாற்றுத்திறனாளிகளு க்கான சீசன் டிக்கெட் பெறவும், இந்த அடையாள அட்டையை பயன்படுத்திக் கொள்ளலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.