சென்னை,மார்ச் 20- 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் சீனாவில் பரவத் தொடங்கி பல உயிர்களைக் பலி வாங்கி வரும் கொரோனா வைரஸ் நோயுடன் (கோவிட் -19, ஊடீஏஐனு-19) உலகம் மிகக் கடுமையாகப் போராடி வருகிறது. அண்மையில் இந்தியாவில் புதி தாகக் கொரோனா வைரஸ் பாதித்த தாக பலர் கண்டறியப்பட்டு சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ள னர். தற்போதைய நிலையில் இந்தி யாவில் இந்தத் தொற்றால் பாதிக் கப்பட்டவர்கள் என உறுதிப்ப டுத்தப்பட்வர்களின் எண்ணிக்கை 171ஐ தாண்டியுள்ளது. கொரோனா வைரஸ்கள் (CoV) ஒரு பெரிய வைரஸ் குடும்பத்தைச் சேர்ந்த நோய்க் கிருமி ஆகும். அவை சளி எனப்படும் ஜலதோஷத்தி லிருந்து மத்திய கிழக்கு சுவாச நோய்க்குறி (Middle East Respiratory Syndrome (MERS-CoV)) மற்றும் கடுமையான தீவிர சுவாச நோய்க்குறி (Severe Acute Respiratory Syndrome (SARS-CoV).) வரை பலவிதமான நோய் களை ஏற்படுத்துகின்றன.
அடிக்கடி கை கழுவுதலின் முக்கியத்துவம்
அடிக்கடி கை கழுவுதல், இரு மும்போதும், தும்மும்போதும் வாய் மற்றும் மூக்கை மூடிக்கொள்வது,. இறைச்சிகள் மற்றும் முட்டைகளை நன்கு சமைப்பது உள்ளிட்டவை நோய் பரவாமல் தடுக்க எடுக்க வேண்டிய முக்கிய நடவடிக்கை களில் அடங்கும். காய்ச்சல், இருமல், மூச்சுத் திண றல் மற்றும் வயிற்றுப் போக்கு ஆகிய நான்கும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டிய மிக முக்கியமான அறிகுறிகள் என்பதை நான் வலி யுறுத்திக் கூறுகிறேன். அறிகுறிக ளின் பட்டியலில் சளி மற்றும் மூக்கில் நீர் வடிதல் ஆகியவை பெரிதாக இல்லை. சுவாரஸ்யமான ஒரு அம்ச மாக கொரோனா தொற்று அறிகுறி களில் இந்த இரண்டும் மிகக் கீழ் நிலையிலேயே இடம்பெற்றுள்ளன. ஆனாலும் இவை நோய்த் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்பை அதிக ரிக்கிறது. கொரோனா வைரஸ் அபா யத்தைக் குறைக்க நாம் அனைவரும் எடுக்க வேண்டிய நான்கு முக்கிய நடவடிக்கைகள் உள்ளன. அவை பின்வருமாறு: அடிக்கடி கைகளைக் கழுவு தல்கைகளை சுத்திகரிக்கும் கிருமி நாசினிகளைப் (சானிடைசர்கள்) பயன்படுத்துதல்கைகளைக் கழுவும் சரியான வழியை பின்பற்றுவது கைகளைச் சுத்திகரிக்கும் கிருமி நாசினிகளைச் சரியாகப் பயன்ப டுத்துதல்
சமைப்பதற்கும் சாப்பிடுவ தற்கும் முன்பும் பின்பும், சமைக்காத உணவைத் தொட்ட பிறகும் உங்கள் கைகளைக் கட்டாயம் கழுவ வேண் டும். உங்கள் கைகள் அழுக்காக இருக்கும்போது நிச்சயம் கைக ளைக் கழுவ வேண்டியது அவசிய மாகும். இருமல் அல்லது தும்ம லுக்குப் பிறகும், நோய்வாய்ப்பட்ட வர்களைச் சந்தித்த பிறகும், கழிப்ப றைகளைப் பயன்படுத்திய பின்ன ரும் விலங்குகளைத் தொட்ட பின்ன ரும் கைகளைக் கழுவ வேண்டும். கொரோனா வைரஸ் போன்ற தொற்று நோய்கள் வராமல் தடுக்க கை கழுவும் சுத்திகரிப்பான்கள் மிக முக்கியமானவை ஆகும். இதுபோன்ற நோய்கள் பரவா மல் தடுப்பதற்கான சரியான வழி முறைகள் குறித்து அனைவரும் தெரிந்து கொண்டு விழிப்புணர்வு டன் செயலாற்ற வேண்டும். முடி யும்போதெல்லாம் வெதுவெதுப் பான தண்ணீரைப் பயன்படுத்தி சோப்புப் போட்டு கை கழுவுவது நல்லது. கை கழுவும் நடைமுறை, எந்தவொரு வைரஸ் தொற்று பரவும் விகிதத்தையும் வியத்தகு அளவில் குறைக்கும். நன்கு நுரை வரும் வகையில் 20 விநாடிகளுக்கு கை கழுவுதல் முக்கியம். இந்த 20 விநாடிகள். விரல் களுக்கு இடையில் மற்றும் நகங்க ளுக்கு கீழ் உள்ள பகுதியை சுத்தம் செய்து, பின்னர் உங்கள் கைகளை மெல்லிழைத் தாள் எனப்படும் திசு காகிதம் (டிஷ்யூ பேப்பர்) மூலம் துடைப்பது நல்லது. குடிநீர்க் குழாயை மூடுவதற்கு கூட நீங்கள் திசுக் காகிதம் எனப்படும் டிஷ்யூ பேப்பரைப் பயன்படுத்த வேண்டும். பின்னர் அதை முறையாக அப்புறப்படுத்த வேண்டும்.
கை கழுவும் சுத்திகரிப்பான் களைச் (சானிடைசர்) சரியான வழி யில் பயன்படுத்துவதற்கு மூன்று முக்கிய அம்சங்கள் உள்ளன: ஊற்றுதல், தேய்த்தல், முழுமை யாக காயும் வரை காத்திருத்தல் ஆகியவையே அந்த மூன்று வழி முறைகள் ஆகும். குழந்தைகளைப் பொறுத்த வரை, அனைத்து நேரங்களிலும் அவர்கள் கைகளைச் சரியாகக் கழுவுவார்கள் என்று கூற முடியாது. எனவே கை கழுவும் சுத்திகரிப்புத் திரவத்தின் (சானிடைசர்) பயன்பாடு அவர்களுக்கு சுகாதாரத்தையும் ஆரோக்கியத்தையும் சிறந்த உணர்வையும் தருகிறது. உணவு சாப்பிடுவதற்கு முன்பு கைகளை கிருமி நாசினிகள் கொண்டு சுத்தம் செய்வது குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் என இருவருக்குமே மிகவும் முக்கியமானது. பச்சை யான அல்லது சமைக்காத உணவைத் தவிர்ப்பது மற்றும் இறைச்சிச் சந்தை களைத் தவிர்ப்பது உள்ளிட்டவை நோய்த் தொற்றைத் தடுப்பதற்கான பிற தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாக அமையும் என்கிறார் புகழ்பெற்ற குழந்தைகள் மருத்துவ நிபுணர் டாக்டர் முகேஷ் சங்க்லேச்சா. இவர் தொற்று நோய்த் தடுப்பில் சிறப்பு ஆர்வம் கொண்டவர். மும்பை மருத்துவமனையின் மருத்துவ அறி வியல் நிறுவனத்தின் குழந்தைகள் பிரிவில் மூத்த ஆலோசகராகவும் கடந்த 25 ஆண்டுகளாக தனிப்பட்ட முறையில் குழந்தைகள் நல மருத் துவ சிகிச்சை வழங்கும் தலை சிறந்த மருத்துவராகவும் திகழ்ந்து வருகிறார்.