வாகன விபத்தில் உதவி ஆய்வாளர் பலி
பூந்தமல்லி, ஜூலை 8 - சென்னை கொரட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் உமாபதி(48). இவர் பூந்தமல்லியை அடுத்த கரையான் சாவடியில் உள்ள மத்திய ரிசர்வ் காவல் பாதுகாப்பு படைப்பிரிவில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் ஞாயிறன்று இரவு அவர் மோட்டார் சைக்கிளில் குமணன்சாவடி அருகே சென்று கொண்டி ருந்தார். அப்போது நிலை தடுமாறி கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்த உமா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அதேபோல், வேலூரைச் சேர்ந்தவர் தேவன்(38), இவர் சென்னையில் தங்கி தனியார் நிறுவனத்தில் வேலைக்கு சென்று வந்தார். திங்களன்று காலை வேலைக்கு செல்வ தற்காக மோட்டார் சைக் கிளில் பூந்தமல்லியை அடுத்த நசரத்பேட்டை அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது சாலை ஓரத்தில் நின்று கொண்டிருந்த லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் சம்பவ இடத்திலேயே தேவன் உயிரிழந்தார். இந்த விபத்துகள் குறித்து பூந்த மல்லி போக்குவரத்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரூ.17 லட்சம் மதிப்புள்ள நகை பணம் கொள்ளை
திருவள்ளூர், ஜூலை 8- கும்மிடிப்பூண்டி அருகே கண்ணாடி கைவினைப் பொருட்கள் தயாரிக்கும் தொழிலாளியின் வீட்டில் ரூ. 17 லட்சம் மதிப்பிலான பணம், நகைகள் கொள்ளையடித்த மர்ம நபர்கள். திருவள்ளூர் மாவட்டம், ஓம் சமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன். இவர் வீட்டு அலங்கார கண்ணாடி கைவினைப் பொருட்கள் தயாரித்து வருகிறார். இவர் ஞாயிறன்று இரவு வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் திரௌபதி அம்மன் கோவில் திருவிழாவில் கலந்து கொள்வதற்காக சென்றார். பிறகு விழா முடிந்து வீட்டிற்கு வந்தபோது, வீட்டின் பின்புற கதவு உடைக்கப்பட்டிருந்தது. இதைத் கண்டு அதிர்ச்சி யடைந்த அவர்கள் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவை திறந்து 70 சவரன் நகை, 2 கிலோ வெள்ளி, ரூ 30 ஆயிரத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது.புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.