tamilnadu

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

துப்பாக்கிச் சுடும்   பயிற்சியில் போலீசார்!

சென்னை, ஜூலை 18 - மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர் ‘முத்தமிழ் அறிஞர் கலைஞர் டாக்டர் எம். கருணாநிதி’ என்ற பெயரில் ஒரு நினைவு நாணயம் வெளியிட தமிழ்நாடு அரசு விரும்பியது. 

இதற்கு ஒன்றிய அரசு அனுமதி வழங்கியது. அதன்படி நாணயத்தின் மையத்தில் கலைஞர் மு. கருணாநிதி உருவப்படமும், கீழே அவர் பயன்படுத்திய ‘தமிழ் வெல்லும்!’ என்ற வாசகமும் இடம் பெறுகிறது. கலைஞர் எம். கருணாநிதி பிறந்த நூற்றாண்டு (1924-2024) என தேவநாகரி மற்றும் ஆங்கிலத்தில் இடம் பெறும். 

சுமார் 35 கிராம் எடை கொண்ட இந்த ரூ. 100 நாணயத்தில் 50  விழுக்காடு வெள்ளியும், 40 விழுக்காடு தாமிரமும், நிக்கல் மற்றும் துத்தநாகம் முறையே தலா 5 விழுக்காடும் கலந்திரு க்கும் என  ஒன்றிய நிதியமைச்சகம் தெரி வித்துள்ளது. ஆனால் இதன் விலை ரூ. 2,500 என ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது.

டிஎன்பிஎஸ்சி குரூப் 2  தேர்வு விண்ணப்பிக்க  இன்று கடைசி நாள்!

சென்னை, ஜூலை 18- தமிழ்நாடு அரசு துறைகளில் உள்ள உதவி ஆய்வாளர், துணை வணிகவரி அலுவலர், துணைப் பதிவாளர், இள நிலை வேலைவாய்ப்பு அலுவலர், தனிப் பிரிவு அலுவலர், உதவிப் பிரிவு அலு வலர், வனவர் என 507 குரூப் 2 பணி யிடங்கள் காலியாக உள்ளன. இதே போல மேலாண்மை இயக்குநரின் நேர்முக உதவியாளர், முதுநிலை ஆய்வாளர், தணிக்கை ஆய்வாளர், உதவி ஆய்வாளர், கைத்தறி ஆய்வா ளர், மேற்பார்வையாளர், இளநிலை கண்காணிப்பாளர், உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் காலி யாக  1,820 குரூப் 2ஏ பணியிடங்கள் காலி யாக உள்ளன.

இவ்வாறு மொத்தம் 2,327 இடங் களை நிரப்புவதற்கு ஒருங்கிணைந்த குரூப்-2, குரூப்-2ஏ முதல்நிலைத் தேர்வுக்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி ஜூன் 20 அன்று வெளியிட்டது.

இதில், செப்டம்பர் 14 அன்று நடைபெறவுள்ள டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ முதல்நிலைத் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஜூலை 19 கடைசி நாள் ஆகும். https://www.tnpsc.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

இதில் தேர்ச்சி பெறுவோருக்கு பிரதான தேர்வு குரூப்-2 பணிகளுக்கான தனியாகவும், அதேபோல், குரூப்-2 ஏ பணிகளுக்கு தனியாகவும் நடத்தப்பட இருக்கிறது. இதுவரை குரூப்-2 பணிகளுக்கான நேர்காணல் இருந்து வந்தது. தற்போது முதல் முறையாக குரூப்-2 ஏ பணிகள் போன்ற குரூப்-2 பணிகளுக்கான நேர்முகத் தேர்வு கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

‘ஜூலை 18 - தமிழ்நாடு நாள்’ : முதல்வர் வாழ்த்து

சென்னை, ஜூலை 18- தமிழ்நாட்டில் 2021-ஆம் ஆண்டு பொறுப்பேற்ற மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு, சென்னை மாநிலத்திற்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டி சட்டப் பேரவை யில் தீர்மானம் நிறைவேற்றிய ஜூலை 18 அன்று ‘தமிழ்நாடு நாள்  விழா’ கொண்டாடப்படும் என்று அறிவித்து அரசாணை வெளி யிட்டது. 

அதன்படி ‘ஜூலை 18’ தமிழ்நாடு நாளாக கொண்டாடப்பட்டு வரு கிறது. இதனையொட்டி தமிழ்நாடு என பெயர் சூட்டி முன்னாள் முத லமைச்சர் அண்ணா சட்டப்பேரவை யில் பேசிய வீடியோ காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ‘எக்ஸ்’ வலைதள பக்கத்தில் பகிர்ந்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அதில், “கடல் கண்டு, மலை கண்டு பயன்கொண்ட தமிழ்நாடு வாழ்க... களங்கண்டு, கலை கண்டு, கவி கொண்ட தமிழ்நாடு வாழ்க... உடல் கொண்டு, உரம் கொண்டு, உயிர் கொண்ட தமிழ்நாடு வாழ்க... ஜூலை 18, தமிழ்நாடு திருநாள் என்று சொல்லும்போதே நம் உள்ளத்தில் மகிழ்ச்சி ஏற்படுகிறது. ஒரு ஆற்றல் பிறக்கிறது. தமிழ்நாடு வாழ்க... தமிழ்நாடு வாழ்க... தமிழ்நாடு வாழ்க..” என்று தெரிவித்துள்ளார்.