சென்னை, ஆக.23 - வீடு கேட்டு போராடிய மக்களை காவல்துறையினர் அராஜகமாக கைது செய்தனர். கைக்குழந்தை யுடன் போராடிய பெண்ணை தரதரவென்று இழுத்து சென்ற அடக்குமுறை அரங் கேறியது.
எழும்பூர் சட்டமன்ற தொகுதிகுட்பட்ட 58வது வட்டம் ரிப்பன் மாளிகை அருகாமையில் சைடாமஸ் சாலையோரத்தில் 64 குடும் பங்கள் வசித்து வந்தன. 20 ஆண்டுகளுக்கு முன்பாக இந்த குடும்பங்களை அதிமுக அரசு அகற்றிய தோடு, அனைவருக்கும் மாற்று இடம் தரப்படும் என்று உறுதி அளித்தது. அதன்படி மாற்று இடம் தரப்பட வில்லை.
அன்றைக்கு வெளி யேற்றப்பட்ட குடும்பங்கள் அடிப்படை வசதி இல்லாத ஒரு கட்டிடத்தில் வசித்து வந்தனர். தற்போது 128 குடும்பங்களாக மாறியுள்ள னர். மார்க்சிஸ்ட் கட்சியின் வற்புறுத்தலையடுத்து திமுக அரசு கட்டிடத்தில் வசிக்கும் மக்கள் குறித்து கணக்கெடுப்பு நடத்தியது.
நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அடுக்கு மாடி குடியிருப்பில் வீடு வழங்க குடும்பத்திற்கு 4,50 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் அல்லது தனி யார் நிதி நிறுவனத்தில் கடன் வாங்கி செலுத்த வேண்டும் என்றனர்.
இதற்கு மார்க்சிஸ்ட் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்த தோடு, 128 குடும்பங்களும் பட்டியலின சமூகத்தை சேர்ந்தவர்கள். அரசு ஒப்புக் கொண்டபடி மாற்று இடம் தராமல் காலதாமதம் செய்த தற்கு அரசுதான் இழப்பீடு தர வேண்டும். எனவே, வாரிய குடியிருப்பை கட்டணமின்றி வழங்க வேண்டும் என்று கோரி வருகிறது.
இந்த நிலையில் கட்டண மின்றி வீடு ஒதுக்கக்கோரி வியாழனன்று (ஆக.22) சூளை ரவுண்டானா அருகே சிபிஎம் மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா தலைமையில் மக்கள் அடுத்தடுத்து மறியலில் ஈடுபட்டனர். மாநகராட்சி, வாரிய அதிகாரிகள் வராததால் போராட்டம் தொடர்ந்தது.
அப்போது அங்கு வந்த காவல்துறை துணை ஆணையர் ரகுபதி உள்ளிட்ட காவலர்கள் சாலை மறி யலில் ஈடுபட்டவர்களை அராஜகமாக அப்புறப் படுத்தினர். கைக்குழந்தை யுடன் போராடிய பெண்ணை தரதரவென்று இழுத்துச் சென்று கைது செய்தனர். இதை தடுத்த சிபிஎம் மாவட்டச் செயலாளர் செல்வாவையும் காவ லர்கள் அராஜகமான முறை யில் கைது செய்தனர். மக்கள் வாகனத்தை சூழந்து கொண்டு நகர விடாமல் செய்தனர்.
இதனைத் தொடர்ந்து கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் இ.சர்வேசன், எழும்பூர் பகுதி செயலாளர் கே.முரு கன், பகுதி குழு உறுப்பினர் பி-கே.மூர்த்தி, ராஜாமணி. பெரிய மேடு செயலாளர் மனோகர், வழக்கறிஞர் மோகன் உள்ளிட்டு நூற்று க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர்.
போராட்டத்தில் பெண்கள் அதிக அளவில் இருந்த போதிலும் ஆண் காவலர்கள் அதிக அளவில் குவிக்கப்பட்டு, ஆண் காவ லர்கள் மூலமாகவே பெண்கள் அப்புறப்படுத்திய அநாகரீகமும் நடந்தது. கைது செய்யப்பட்டவர்கள் புரசைவாக்கத்தில் உள்ள மண்டபத்தில் சிறை வைக்கப்பட்டனர். அவர் களுக்கு குடிநீர், உணவு கூட வழங்கப்படவில்லை.