tamilnadu

திருவள்ளூரில் பிளஸ் 2 மாணவி தீக்குளித்து தற்கொலை

திருவள்ளூரில் பிளஸ் 2 மாணவி தீக்குளித்து தற்கொலை

திருவள்ளூர், மார்ச் 4- பொதுத்தேர்வு தொடங்கிய நாளிலேயே பிளஸ் 2 மாணவி பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்த சம்பவம் திருவள்ளூரில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திங்களன்று பிளஸ் 2 பொதுத்தேர்வு தொடங்கியது. இந்தநிலையில் திருவள்ளூர், ஜெயா நகரைச் சேர்ந்த சுரேஷ் என்பவரின் மகள் பிரியா  என்ற மாணவியும்  பொதுத்தேர்வுக்கு தயாரானார். இந்த  நிலையில் திங்களன்று அதிகாலையில் வீட்டின் மொட்டை மாடியில் உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து மாணவி தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். இதனைக்கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மாணவியை மீட்டு திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். மருத்துவமனையில் மாணவியை பரிசோதித்த மருத்து வர்கள், 80 விழுக்காடு தீக்காயம் உள்ளதால் முதலுதவி சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்தநிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.